பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 15. சாரூபம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்

தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா

அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்

இங்கிவ ராக விழிவற்ற யோகமே.  1 

 

 

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே

சயிலம தாகுஞ் சராசரம் போலப்

பயிலுங் குருவின் பதிபுக்க போதே

கயிலை இறைவன் கதிர்வடி வாமே.  2 

 

திருச்சிற்றம்பலம்