பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 05. சரியை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்

றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்

ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்

தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே.  1 

 

 

உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை

உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை

உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை

செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே.  2 

 

 

நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்

தேடித் திரிந்து சிவபெரு மான்என்று

பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்

கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.  3 

 

 

பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்

அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்

சுத்த வியமாதி சாதகர் தூயோகர்

சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே.  4 

 

 

சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்

சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்

ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்

நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.  5 

 

 

கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை

அரிய சிவனுரு அமரும் அரூபந்

தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை

உரியன நேயத் துயர்பூசை யாமே.  6 

 

 

சரியாதி நான்குந் தருஞான நான்கும்

விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்

பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து

மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.  7 

 

 

சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்

அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி

சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்

அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே.  8 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கல்லுளிச் சித்தர்
View Details
கௌரியின் துயர் தீர்த்தல்
View Details
திருவல்லம் பாம்பணையான் சித்தர்
View Details