பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 03. மார்க்க சைவம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்

நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந்

துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ்

சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.  1 

 

 

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி

பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்

ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்

பாடுறு சுத்தசை வப்பத்த நித்தனே.  2 

 

 

ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு

மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்

வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மையொன்

றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே.  3 

 

 

சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ்

சத்தும் அசத்துந் தணந்த பராபரை

உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை

அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.  4 

 

 

சத்தும் அசுத்துந் தணந்தவர் தானாகிச்

சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய்

முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்

சித்தியு மங்கே சிறந்துள தானே.  5 

 

 

தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற

மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற

முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை

உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே.  6 

 

 

பூரணம் தன்னிலே வைத்தற்ற வப்போத

மாரண மந்த மதித்தானந் தத்தோடு

நேரென ஈராறு நீதி நெடும் போகங்

காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே.  7 

 

 

மாறாத ஞான மதிப்பற மாயோகந்

தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்

பேறான பாவனை பேணி நெறிநிற்றல்

கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே.  8 

 

 

வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர்

நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்

வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்

சாதா ரணமன்ன சைவர் உபாயமே.  9 

 

 

விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்

கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்

எண்ணினைச் சென்றணு காம லெணப்படும்

அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.  10 

 

 

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக

நின்று சமய நிராகார நீங்கியே

நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்

சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.  11

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

குறையாத அரிசி மூட்டை அளித்தல்
View Details
மீனாக்ஷி திருமணம்
View Details
கண தங்கணான் சித்தர்
View Details