பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 07. பூரண சக்தி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும்

அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை

அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்

அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே.  1 

 

 

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி

புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்

கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி

கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே.  2 

 

 

கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும்

வம்பில் திகழும் மணிமுடி வள்ளலும்

இன்பக் கலவி இனிதுறை தையலும்

அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே.  3 

 

 

இன்பக் கலவியில் இட்டு எழுகின்றதோர்

அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்

துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்

என்பிற் பாரசக்தி என்னம்மை தானே.  4 

 

 

என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று

உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்

மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும்

பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.  5 

 

 

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்

பார்மேல் இருப்பதொரு நூறு தானுள

பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்

நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே.  6 

 

 

ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர்

மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்

பாணைய மாய பரத்தை அறிந்தபின்

தாணைய மாய தனாதனன் தானே.  7 

 

 

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி

வானேர் எழுந்து மதியை விளக்கினள்

தேனேர் எழகின்ற தீபத்து ஒளியுடன்

மானே நடமுடை மன்றறி யீரே.  8 

 

 

அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து

அறிவான மங்கை அருளது சேரில்

பிரியா அறிவறி வார்உளம் பேணு

நெறியாய சித்த நினைந்திருந் தாளே.  9 

 

 

இரவும் பகலும் இலாத இடத்தே

குரவம் செய்கின்ற குழலியை நாடி

அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப்

பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே.  10 

 

 

பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு

மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட

மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச்

சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.  11 

 

 

நின்ற பராசக்தி நீள்பரன் தன்னோடு

நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும்

நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே

மன்றன வற்றுள் மருவிடுந் தானே.  12 

 

 

மருவொத்த மங்கையும் தானும் உடனே

உருவொத்துநின்றமை ஒன்றும் உணரார்

கருவொத்து நின்று கலக்கின போது

திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே.  13 

 

 

சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி

விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்

சந்திர பூமி சடாதரி சாத்தவி

அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே.  14 

 

 

ஆறி யிருந்த அமுத பயோதரி

மாறி யிருந்த வழியறி வாரில்லை

தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன்

ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.  15 

 

 

உடையவன் அங்கி உருத்திர சோதி

விடையவன் ஏறி விளங்கி இருக்கும்

கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து

அடையது வாகிய சாதகர் தாமே.  16 

 

 

தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது

பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுள

பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்

பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே.  17 

 

 

பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்

திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம்

விண்கொடி யாகி விளங்கி வருதலால்

பெண்கொடி யாக நடந்தது உலகே.  18 

 

 

நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்

இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்

படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே

தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.  19 

 

 

அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம்

எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது

மடுக்கும் தாமரை மத்தகச் தேசெல

முடுக்கும் தாமரை முச்சது ரத்தே.  20 

 

 

முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்

எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்

கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற

எச்சது ரத்தும் இருந்தனள் தானே.  21 

 

 

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப்

பரந்தன வாயு திசைதிசை தோறும்

குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி

நடந்தது தேறல் அதோமுகம் அம்பே.  22 

 

 

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மனி

கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய

செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்

நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.  23 

 

 

நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி

துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்

அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்து

புகலும்முச் சோதி புனையநிற் பாளே.  24 

 

 

புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள்

வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே

புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப்

புனையவல் லாளையும் போற்றியென் பேனே.  25 

 

 

போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்

ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை

சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை

கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே.  26 

 

 

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி

வடிவார் திரிபுரை யாமங்கை சங்கைச்

செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்

அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே.  27 

 

 

மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி

பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி

புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு

வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே..  28 

 

 

தாவித் தவப்பொருள் தான்அவன் எம்இறை

பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து

மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து

ஆவிக்கும் அப்பொருள் தானது தானே.  29 

 

 

அதுஇது என்பர் அவனை அறியார்

கதிவர நின்றதோர் காரணம் காணார்

மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை

திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே.  30 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வெள்ளையானை சாபம் தீர்த்தல்
View Details
பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்குதல்
View Details
புலத்தியர்
View Details