பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 15. ஆயுள் பரிட்சை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்

உத்தம மிக்கிடில் ஓராறு திங்களா

மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்

நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே  1 

 

 

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்

ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்

ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்

ஓசை யுணர்ந்த உணர்விது வாமே  2 

 

 

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்

நாமே உறைகின்ற நன்மை யளித்திடும்

பூமேல் உறைகின்ற போதகம் வந்திடுந்

தாமே யுலகில் தலைவனு மாமே  3 

 

 

தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை

தலைவ னிடம்வல மாயிடில் தையல்

தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில்

தலைவ னிடம்வலந் தன்வழி நூறே  4 

 

 

ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந்

தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்

ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந் 

தேறியே நின்று தெளியிவ் வகையே.  5 

 

 

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்

அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாஞ்

செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்

முவ்வகை யாமது முப்பத்து மூன்றே  6 

 

 

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற்

எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்

ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்

பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே  7 

 

 

பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்

ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்

போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்

தேக்கலு மாகுந் திருத்திய பத்தே  8 

 

 

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்

பாயிரு நாலும் பகையற நின்றிடும்

தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்

ஆயுரு வாறென் றளக்கலு மாமே  9 

 

 

அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்

விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்

துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்

களக்க மறமூன்றிற் காணலு மாமே  10 

 

 

காணலு மாகுங் கருதிய பத்தோடிற்

காணலு மாகுங் கலந்த இரண்டையும்

காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்

காணலு மாகுங் கருத்துற ஒன்றே  11 

 

 

கருதும் இருபதிற் காண ஆறாகும்

கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்

கருதும் இருப துடனாறு காணிற்

கருதும் இரண்டெனக் காட்டலு மாமே  12 

 

 

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்

காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்

காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்

காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே  13 

 

 

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்

பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்

வாரஞ்செய் கின்ற வகையாறஞ் சாமாகில்

ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே  14 

 

 

ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்

கன்றிய நாலுங் கருத்துற மூன்றாகுஞ்

சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்

மன்றியல் பாகு மனையில் இரண்டே  15 

 

 

மனையில்ஒன் றாகும் மாதமு மூன்றுஞ்

சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி

வினையற வோங்கி வெளிசெய்து நின்றால்

தனையுற நின்ற தலைவனு மாமே  16 

 

 

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை

ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை

ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்

ஆரு மறியார் அறிவறிந் தேனே  17 

 

 

அறிவது வாயுவொ டைந்தறி வாய

அறிவா வதுதான் உலகுயி ரத்தின்

பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடிற்

செறிவது நின்று திகழு மதுவே  18 

 

 

அதுவரு ளும்மரு ளான துலகம்

பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளு

மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி

இதுவருள் செய்யும் இறையவ னாமே  19 

 

 

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி

குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்

பழப்பதி யாவது பற்றறும் பாசம்

அழப்படி செய்வார்க் ககலு மதியே  20 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி
View Details
வணிகர் சிறுவனுக்காக வழக்காடுதல்
View Details
படையுடன் சோழனை மடுவில் வீழ்த்தல்
View Details