பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 06. கொல்லாமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்

மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்

நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்

உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.  1 

 

 

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை

வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்

செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை

நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.  2 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கழற்சிங்க நாயனார்
View Details
பன்றிக் குட்டிகளைப் பாலூற்றிக் காப்பாற்றல்
View Details
மெய்ப்பொருள் நாயனார்
View Details