பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 04. இளமை நிலையாமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே

விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்

குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்

விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.  1 

 

 

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்

பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை

நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்

தூண்டு விளக்கின் சுடரறி யாரே.  2 

 

 

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை

ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்

பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை

ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே.  3 

 

 

விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்

கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்

அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக் 

கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே.  4 

 

 

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற

காலங் கழிவன கண்டும் அறிகிலார்

ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி

மேலுங் கிடந்து விரும்புவன் நானே.  5 

 

 

காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும்

மாலை படுவதும் வாணாள் கழிவதும்

சாலும்அவ் ஈசன் சலவிய னாகிலும்

ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய் தானே.  6 

 

 

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்

பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்

பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்

பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.  7 

 

 

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை

உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்

விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்

எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.  8 

 

 

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற

நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்

கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்

சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.  9 

 

 

எய்திய நாளில் இளமை கழியாமை

எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்

எய்திய நாளில் எறிவது அறியாமல்

எய்திய நாளில் இருந்துகண் டேனே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பத்திரனுக்குப் பலகையிடல்
View Details
திருமூலர்
View Details
அன்னக்குழி, வைகை அழைத்தல்
View Details