அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யானரு ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பால் நலமொளி ரும்புரி தாழ்குழற் பூங்கொடியே. 1
சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது வோவின்று சூழ்கின்றதே. 2
திருச்சிற்றம்பலம்