எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

020 ஓதற்பிரிவு

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்

ஆரள வில்லா அளவுசென் றாரம் பலத்துள்நின்ற

ஓரள வில்லா ஒருவன் இருங்கழ லுன்னினர்போல்

ஏரள வில்லா அளவின ராகுவ ரேந்திழையே. 1

 

 

வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே

காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரு மென்பதுகொண்

டோதலுற் றாருற் றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான்

போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே. 2

 

 

கற்பா மதிற்றில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த

விற்பா விலங்கலெங் கோனை விரும்பலர் போலஅன்பர்

சொற்பா விரும்பின ரென்னமெல் லோதி செவிப்புறத்துக்

கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே. 3

 

 

பிரியா மையுமுயி ரொன்றா வதும்பிரி யிற்பெரிதுந்

தரியா மையுமொருங் கேநின்று சாற்றினர் தையல்மெய்யிற்

பிரியாமை செய்துநின் றோன்தில்லைப் பேரிய லூரரன்ன

புரியா மையுமிது வேயினி யென்னாம் புகல்வதுவே.  4

 

திருச்சிற்றம்பலம்