அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை வண்டுதண் டேன்பருகித்
தேதே யெனுந்தில்லை யோன்சே யெனச்சின வேலொருவர்
மாதே புனத்திடை வாளா வருவர்வந் தியாதுஞ்சொல்லார்
யாதே செயத்தக் கதுமது வார்குழ லேந்திழையே. 1
வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கொலோ
எரிசேர் தளிரன்ன மேனியன் ஈர்ந்தழை யன்புலியூர்ப்
புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத்
தெரியே முரையான் பிரியா னொருவனித் தேம்புனமே. 2
நீகண்ட னையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ ரலவன்தன் சீர்ப்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற்கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன்றாகிநின் றானப் பெருந்தகையே. 3
சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப்
பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகழிப் பாறுலவு
துங்க மலிதலை யேந்தலி னேந்திழை தொல்லைப்பன்மா
வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. 4
புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா
திரங்கிடெந் தாயென்றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு
கரங்கடந் தானொன்று காட்டமற் றாங்கதுங் காட்டிடென்று
வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே. 5
உள்ளப்படுவன வுள்ளி யுரைத்தக் கவர்க்குரைத்து
மெள்ளப் படிறு துணிதுணி யேலிது வேண்டுவல்யான்
கள்ளப் படிறர்க் கருளா அரன்தில்லை காணலர்போல்
கொள்ளப்படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே. 6
மேவியந் தோலுடுக் குந்தில்லை யான்பொடி மெய்யிற்கையில்
ஓவியந் தோன்றுங் கிழிநின் னெழினென் றுரையுளதால்
தூவியந் தோகையன் னாயென்ன பாவஞ்சொல் லாடல்செய்யான்
பாவியந் தோபனை மாமட லேறக்கொல் பாவித்ததே. 7
பொன்னார் சடையோன் புலியூர் புகழா ரெனப்புரிநோய்
என்னா லறிவில்லை யானொன் றுரைக்கிலன் வந்தயலார்
சொன்னா ரெனுமித் துரிசுதுன் னாமைத் துணைமனனே
என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லுநீர்மை இனியவர்க்கே. 8
திருச்சிற்றம்பலம்