எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

010 மடற்றிறம்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

பொருளா வெனைப்புகுந் தாண்டு புரந்தரன் மாலயன்பால்

இருளா யிருக்கு மொளிநின்ற சிற்றம் பலமெனலாஞ்

சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர்

அருளா தொழியி னொழியா தழியுமென் னாருயிரே. 1

 

 

காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து

வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர்

ஈசன சாந்தும் எருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப்

பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே. 2

 

 

விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப

மண்ணை மடங்க வருமொரு காலத்து மன்னிநிற்கும்

அண்ணல் மடங்க லதளம் பலவ னருளிலர்போற்

பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றொர் பெண்கொடியே. 3

 

 

கழிகின்ற வென்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான்

கிழியொன்ற நாடி யெழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்

றழிகின்ற தாக்கிய தாளம் பலவன் கயிலையந்தேன்

பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த் தெருவிடைப் போதுவனே. 4

 

 

நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை நான்முகன் மாலறியாக்

கடனாம் உருவத் தரன்தில்லை மல்லற்கண் ணார்ந்த பெண்ணை

உடனாம் பெடையொடொண் சேவலும் முட்டையுங் கட்டழித்து

மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே. 5

 

 

அடிச்சந்த மால்கண் டிலாதன காட்டிவந் தாண்டுகொண்டென்

முடிச்சந்த மாமல ராக்குமுன் னோன்புலி யூர்புரையுங்

கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி யனநடைக்குப்

படிச்சந்த மாக்கும் படமுள வோநும் பரிசகத்தே. 6

 

 

யாழுமெழுதி யெழின்முத் தெழுதி யிருளின்மென்பூச்

சூழு மெழுதியொர் தொண்டையுந் தீட்டியென் தொல்பிறவி

ஏழு மெழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம்

போழு மெழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே.  7

 

 

ஊர்வா யொழிவா யுயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச்

சீர்வாய் சிலம்ப திருத்த இருந்தில மீசர்தில்லைக்

கார்வாய் குழலிக்குன் னாதர வோதிக்கற் பித்துக்கண்டால்

ஆர்வாய் தரினறி வார்பின்னைச்செய்க அறிந்தனவே. 8

 

 

பைந்நா ணரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம் 

மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்னிம்

மொய்ந்நாண் முதுதிரை வாயா னழுந்தினு மென்னின்முன்னும்

இந்நாளிதுமது வார்குழ லாட்கென்க ணின்னருளே. 9

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

செருத்துணை நாயனார்
View Details
மாயக் குதிரைகள் விற்றல்
View Details
உக்கிர பாண்டியனுக்கு வளையம்ரூபவ் வேல்ரூபவ் சண்டாயுதம் கொடுத்தல்
View Details