அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு மறந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. 1
அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென் றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங் காகு முனக்கவளே. 2
செந்நிற மேனிவெண்ணீறணி வோன்தில்லை யம்பலம்போல்
அந்நிற மேனிநின் கொங்கையி லங்கழி குங்குமமும்
மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங் குடைவ னிருஞ்சுனையே. 3
பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத் தோன்தடமால்வரை வாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பகண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்சுனையே. 4
காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்
ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே. 5
திருச்சிற்றம்பலம்