அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
பல்லில னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்
எல்லிலன் நாகத்தொ டேனம் வினாயவன் யாவன்கொலாம்
வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டமெய்யோர்
சொல்லில னாகற்ற வாகட வானிச் சுனைப்புனமே. 1
ஆழமன் னோவுடைத் திவ்வையர் வார்த்தை யனங்கன்நைந்து
வீழமுன் னோக்கிய வம்பலத் தான்வெற்பி னிப்புனத்தே
வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்றழையாய்
மாழைமென் னோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே. 2
திருச்சிற்றம்பலம்