ஆறாம்-திருமுறை

092 மூவிலைவேற் கையானை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : கழுக்குன்றம்

திருச்சிற்றம்பலம்

 

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை

முதுபிணக்கா டுடையானை முதலா னானை

ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை

ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்

பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்

புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்

காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  1 

 

 

பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்

பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்

சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்

சுடருருவில் என்பறாக் கோலத் தானை

அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை

ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்

கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.  2 

 

 

இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  3 

 

 

இப்பதிகத்தில் 4-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  4 

 

 

இப்பதிகத்தில் 5-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  5 

 

 

இப்பதிகத்தில் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  6 

 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  10

 

திருச்சிற்றம்பலம்