ஐந்தாம்-திருமுறை

081 சிட்ட னைச்சிவ

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பாண்டிக்கொடுமுடி

திருச்சிற்றம்பலம்

 

 

சிட்ட னைச்சிவ

  னைச்செழுஞ் சோதியை

அட்ட மூர்த்தியை

  ஆல நிழலமர்

பட்ட னைத்திருப்

  பாண்டிக் கொடுமுடி

நட்ட னைத்தொழ

  நம்வினை நாசமே.  1 

 

 

பிரமன் மாலறி

  யாத பெருமையன்

தரும மாகிய

  தத்துவன் எம்பிரான்

பரம னாருறை

  பாண்டிக் கொடுமுடி

கரும மாகத்

  தொழுமட நெஞ்சமே.  2 

 

 

ஊச லாளல்லள்

  ஒண்கழ லாளல்லள்

தேச மாந்திருப்

  பாண்டிக் கொடுமுடி

ஈச னேயெனும்

  இத்தனை யல்லது

பேசு மாறறி

  யாளொரு பேதையே.  3 

 

 

தூண்டி யசுடர்

  போலொக்குஞ் சோதியான்

காண்ட லுமெளி

  யன்னடி யார்கட்குப்

பாண்டிக் கொடுமுடி

  மேய பரமனைக்

காண்டு மென்பவர்க்

  கேதுங் கருத்தொணான்.  4 

 

 

நெருக்கி யம்முடி

  நின்றிசை வானவர்

இருக்கொ டும்பணிந்

  தேத்த இருந்தவன்

திருக்கொ டுமுடி

  யென்றலுந் தீவினைக்

கருக்கெ டுமிது

  கைகண்ட யோகமே.  5 

 

 

இப்பதிகத்தில் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  6 

 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்குதல்
View Details
வெள்ளம் தடுத்தல்
View Details
மூர்த்தி நாயனார்
View Details