அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம் திருமுறை
தலம் : கழிப்பாலை
திருச்சிற்றம்பலம்
நெய்தற் குருகுதன் பிள்ளையென்
றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப்
பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன்
வைத்த பரிசறியோம்
எய்தப் பெறின்இரங் காதுகண்
டாய்நம் மிறையவனே. 1
பருமா மணியும் பவளமுத்
தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந்
தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம்
மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை
யானிப் பெருநிலத்தே. 2
நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற்
றிங்கு நமன்தமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற
வேகுளி ரார்தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந்
தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தமன் றேவல்ல
மாயிவ் வகலிடத்தே. 3
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.
திருச்சிற்றம்பலம்