நான்காம்-திருமுறை

106 நெய்தற் குருகுதன்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கழிப்பாலை

திருச்சிற்றம்பலம்

 

நெய்தற் குருகுதன் பிள்ளையென் 

  றெண்ணி நெருங்கிச்சென்று

கைதை மடற்புல்கு தென்கழிப் 

  பாலை யதனுறைவாய்

பைதற் பிறையொடு பாம்புடன் 

  வைத்த பரிசறியோம்

எய்தப் பெறின்இரங் காதுகண் 

  டாய்நம் மிறையவனே.  1 

 

 

பருமா மணியும் பவளமுத் 

  தும்பரந் துந்திவரை

பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் 

  தெற்றப் பொலிந்திலங்குங்

கருமா மிடறுடைக் கண்டனெம் 

  மான்கழிப் பாலையெந்தை

பெருமா னவனென்னை யாளுடை 

  யானிப் பெருநிலத்தே.  2 

 

 

நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் 

  றிங்கு நமன்தமராற்

கோட்பட் டொழிவதன் முந்துற 

  வேகுளி ரார்தடத்துத்

தாட்பட்ட தாமரைப் பொய்கையந் 

  தண்கழிப் பாலையண்ணற்

காட்பட் டொழிந்தமன் றேவல்ல 

  மாயிவ் வகலிடத்தே. 3

 

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

சண்டேசுர நாயனார்
View Details
இடியாப்ப சித்தர்
View Details
பிட்டுக்கு மண் சுமத்தல்
View Details