நான்காம்-திருமுறை

046 ஓம்பினேன் கூட்டை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஒற்றியூர்

திருச்சிற்றம்பலம்

 

ஓம்பினேன் கூட்டை வாளா 

  உள்ளத்தோர் கொடுமை வைத்துக்

காம்பிலா மூழை போலக் 

  கருதிற்றே முகக்க மாட்டேன்

பாம்பின்வாய்த் தேரை போலப் 

  பலபல நினைக்கின் றேனை

ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் 

  ஒற்றியூ ருடைய கோவே.  1 

 

 

மனமெனுந் தோணி பற்றி 

  மதியெனுங் கோலை யூன்றிச்

சினமெனுஞ் சரக்கை யேற்றிச் 

  செறிகட லோடும் போது

மதனெனும் பாறை தாக்கி 

  மறியும்போ தறிய வொண்ணா

துனையுனும் உணர்வை நல்காய் 

  ஒற்றியூ ருடய கோவே. 2

 

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details
புகழ்ச் சோழ நாயனார்
View Details
மூர்க்க நாயனார்
View Details