மூன்றாம்-திருமுறை

041 கருவார் கச்சித்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

 

 

கருவார் கச்சித், திருவே கம்பத்

தொருவா வென்ன, மருவா வினையே.  1 

 

 

மதியார் கச்சி, நதியே கம்பம்

விதியா லேத்தப், பதியா வாரே.  2 

 

 

கலியார் கச்சி, மலியே கம்பம்

பலியாற் போற்ற, நலியா வினையே.  3 

 

 

வரமார் கச்சிப், புரமே கம்பம்

பரவா ஏத்த, விரவா வினையே.  4 

 

 

படமார் கச்சி, இடமே கம்பத்

துடையா யென்ன, அடையா வினையே.  5 

 

 

நலமார் கச்சி, நிலவே கம்பம்

குலவா வேத்தக், கலவா வினையே.  6 

 

 

கரியின் னுரியன், திருவே கம்பன்

பெரிய புரமூன், றெரிசெய் தானே.  7 

 

 

இலங்கை யரசைத், துலங்க வூன்றும்

நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.  8 

 

 

மறையோன் அரியும், அறியா வனலன்

நெறியே கம்பம், குறியால் தொழுமே.  9 

 

 

பறியாத் தேரர், நெறியில் கச்சிச்

செறிகொள் கம்பம், குறுகு வோமே.  10 

 

 

கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்

மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே. 11

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி
View Details
விறன்மிண்ட நாயனார்
View Details
எறிபத்த நாயனார்
View Details