மூன்றாம்-திருமுறை

041 கருவார் கச்சித்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

 

 

கருவார் கச்சித், திருவே கம்பத்

தொருவா வென்ன, மருவா வினையே.  1 

 

 

மதியார் கச்சி, நதியே கம்பம்

விதியா லேத்தப், பதியா வாரே.  2 

 

 

கலியார் கச்சி, மலியே கம்பம்

பலியாற் போற்ற, நலியா வினையே.  3 

 

 

வரமார் கச்சிப், புரமே கம்பம்

பரவா ஏத்த, விரவா வினையே.  4 

 

 

படமார் கச்சி, இடமே கம்பத்

துடையா யென்ன, அடையா வினையே.  5 

 

 

நலமார் கச்சி, நிலவே கம்பம்

குலவா வேத்தக், கலவா வினையே.  6 

 

 

கரியின் னுரியன், திருவே கம்பன்

பெரிய புரமூன், றெரிசெய் தானே.  7 

 

 

இலங்கை யரசைத், துலங்க வூன்றும்

நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.  8 

 

 

மறையோன் அரியும், அறியா வனலன்

நெறியே கம்பம், குறியால் தொழுமே.  9 

 

 

பறியாத் தேரர், நெறியில் கச்சிச்

செறிகொள் கம்பம், குறுகு வோமே.  10 

 

 

கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்

மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே. 11

 

திருச்சிற்றம்பலம்