அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கு அரசர்வளர்
திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல்
உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக்கு உரைசெய்ய
ஒண்ணாமை உணராதேன். 1
தொன்மை முறை வரு மண்ணின்
துகள் அன்றித் துகள் இல்லா
நன்மை நிலை ஒழுக்கத்து நலம்
சிறந்த குடி மல்கிச்
சென்னி மதி புனையவளர் மணி
மாடச் செழும் பதிகள்
மன்னி நிறைந்து உளது
திரு முனைப்பாடி வளநாடு. 2
புனப் பண்ணை மணியினோடும்
புறவின் நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரை சுமந்து கரை
மருங்கு பெரும் பகட்டேர்
இனப் பண்ணை உழும் பண்ணை
எறிந்து உலவி எவ்வுலகும்
வனப்பெண்ண வரும் பெண்ணை மா
நதி பாய் வளம் பெருகும். 3
காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு
எல்லாம் கண் பொழி தேன்
பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு
எல்லாம் குலைக் கமுகு
சாலெல்லாம் தரள நிரை
தடம் எல்லாம் செங்கழுநீர்
மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து
எல்லாம் திருந்து மனை. 4
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு
குறை பொழி கொழும் சாறு
இடை தொடுத்த தேன் கிழிய
இழிந்து ஒழுகு நீத்தம் உடன்
புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப்
புனல் போல் மடை உடைப்ப
உடை மடையக் கரும்படு கட்டியின்
அடைப்ப ஊர்கள் தொறும். 5
கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக்
கைம் முகம் காட்ட
மருங்கு வளர் கதிர்ச் செந்நெல்
வயப் புரவி முகம் காட்டப்
பெருஞ்சகடு தேர் காட்ட
வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க
நெருங்கிய சாதுரங்க பல
நிகர்பனவாம் நிறை மருதம். 6
நறையாற்றுங் கமுகு நவ மணிக்
கழுத்தின் உடன் கூந்தல்
பொறை ஆற்றா மகளிர் எனப்
புறம்பு அலை தண்டலை வேலித்
துறை ஆற்ற மணி வண்ணச்
சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை
நிறை ஆற்று நீர்க்
கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால். 7
மரு மேவு மலர் மேய
மா கடலினுட் படியும்
உரு மேகம் என மண்டி
உகைத்த கரும் கன்று போல்
வரு மேனிச் செங்கண் வரால்
மடி முட்டப் பால் சொரியும்
கரு மேதி தனைக் கொண்டு
கரை புரள்வ திரை வாவி. 8
மொய்யளி சூழ் நிரைநீல
முழு வலயங்களின் அலையச்
செய்ய தளிர் நறு விரலில்
செழு முகையின் நகம் சிறப்ப
மெய்யொளியின் நிழல் காணும் ஆடி
என வெண் மதியை
வைய மகள் கை அணைத்தால்
போல் உயர்வ மலர்ச் சோலை. 9
எயில் குலவும் வளம் பதிகள்
எங்கும் மணம் தங்கும் வயல்
பயிர்க் கண்வியல் இடங்கள் பல
பரந்து உயர் நெற் கூடுகளும்
வெயில் கதிர்மென் குழை மகளிர்
விரவிய மாடமும் மேவி
மயில் குலமும் முகல் குலமும்
மாறாட மருங்கு ஆடும். 10
மறம் தரு தீ நெறி மாற
மணிகண்டர் வாய்மை நெறி
அறம் தரு நாவுக்கரசும்
ஆலால சுந்தரரும்
பிறந்து அருள உளதானால் நம்
அளவோ பேர் உலகில்
சிறந்த திருமுனைப் பாடித் திறம்
பாடும் சீர்ப் பாடு. 11
இவ் வகைய திரு நாட்டில்
எனைப் பல ஊர்களும் என்றும்
மெய் வளங்கள் ஓங்க வரும்
மேன்மையன ஆங்கு அவற்றுள்
சைவ நெறி ஏழ்
உலகும் பாலிக்கும் தன்மையினால்
தெய்வ நெறிச் சிவம்
பெருக்கும் திருவாமூர் திருவாமூர். 12
ஆங்கு வன முலைகள் சுமந்து
அணங்குவன மகளிர் இடை
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன
மணிக் காஞ்சி
ஓங்குவன மாட நிரை
ஒழுகுவன வழுவில் அறம்
நீங்குவன தீங்கு நெறி
நெருங்குவன பெரும் குடிகள். 13
மலர் நீலம் வயல் காட்டும்
மைஞ் ஞீலம் மதி காட்டும்
அலர் நீடு மறு காட்டும்
அணி ஊசல் பல காட்டும்
புலர் நீலம் இருள் காட்டும்
பொழுது உழவர் ஒலி காட்டும்
கல நீடு மனை காட்டும்
கரை காட்டாப் பெருவளங்கள். 14
தலத்தின் கண் விளங்கிய அத்
தனிப் பதியில் அனைத்து வித
நலத்தின் கண் வழுவாத நடை
மரபில் குடி நாப்பண்
விலங்கின் மனை ஒழுக்கத்தின்
மேதக்க நிலைவேளாண்
குலத்தின் கண் வரும் பெருமைக்
குறுக்கையர் தம் குடி விளங்கும். 15
அக் குடியின் மேல்
தோன்றலாய பெரும் தன்மையினார்
மிக்க மனை அறம் புரிந்து
விருந்து அளிக்கும் மேன்மையினார்
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின்
உளர் ஆனார் உளர் ஆனார்
திக்கு நிலவும் பெருமை
திகழ வரும் புகழனார். 16
புகழனார் தமக்கு உரிமைப்
பொருவில் குலக்குடியின் கண்
மகிழவரு மணம் புணர்ந்த
மாதினியார் மணி வயிற்றில்
நிகழும் மலர்ச் செங்கமல
நிரை இதழின் அகவயினில்
திகழ வருந் திரு
அனைய திலகவதியார் பிறந்தார். 17
திலகவதியார் பிறந்து சில முறை
ஆண்டு அகன்றதன் பின்
அலகில் கலைத் துறை தழைப்ப
அரும் தவத்தோர் நெறிவாழ
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி
விளங்கு கதிர் போல் பின்
மலரும் மருள் நீக்கியார்
வந்து அவதாரம் செய்தார். 18
மாதினியார் திரு வயிற்றின்
மன்னிய சீர்ப் புகழனார்
காதலனார் உதித்த தற்பின்
கடன் முறைமை மங்கலங்கள்
மேதகு நல் வினை
சிறப்ப விரும்பிய பாராட்டினுடன்
ஏதமில் பல் கிளை போற்ற
இளங் குழவிப் பதம் கடந்தார். 19
மருள் நீக்கியார் சென்னி
மயிர் நீக்கும் மணவினையும்
தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம்
மகிழ் சிறப்பச் செய்து அதற்பின்
பொருள் நீத்தம் கொள வீசிப்
புலன் கொளுவ மன முகிழ்த்த
சுருள் நீக்கி மலர் விக்கும்
கலை பயிலத் தொடங்கு வித்தார். 20
தந்தையார் களி மகிழ்ச்சி
தலை சிறக்க முறைமையினால்
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில்
செழும் கலையின் திறங்கள் எல்லாம்
முந்தை முறைமையில் பயின்று முதிர
அறிவு எதிரும் வகை
மைந்தனார் மறு ஒழித்த இளம்
பிறை போல் வளர் கின்றார். 21
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு
ஆறு இரண்டின்
முன்னாக ஒத்த குல முதல்
வேளாண் குடித் தலைவர்
மின்னார் செஞ்சடை அண்ணல்
மெய் அடிமை விருப்புடையார்
பொன்னாரும் மணி மௌலிப் புரவலன்
பால் அருள் உடையார். 22
ஆண் தகைமைத் தொழிலின் கண்
அடல் அரியேறு என உள்ளார்
காண் தகைய பெருவனப்பில்
கலிப்பகையார் எனும் பெயரார்
பூண்ட கொடைப் புகழனார் பால்
பொருவின் மகள் கொள்ள
வேண்டி எழுங் காதலினால்
மேலோரைச் செலவிட்டார். 23
அணங்கு அனைய திலகவதியார்
தம்மை ஆங்கு அவர்க்கு
மணம் பேசி வந்தவரும்
வந்தபடி அறிவிப்பக்
குணம் பேசிக் குலம் பேசிக்
கோதில் சீர்ப் புகழனார்
பணம் கொள் அரவு அகல் அல்குல்
பைந் தொடியை மணம் நேர்ந்தார். 24
கன்னித் திருத் தாதையார்
மணம் இசைவு கலிப்பகையார்
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை
வினை முடிப்பதன் முன்
மன்னவற்கு வடபுலத்து ஓர்
மாறு ஏற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை
மேல் அவர் அகன்றார். 25
வேந்தற்கு உற்று உழி வினை
மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு
போந்த வரும் பொரு படையும்
உடன் கொண்டு சில நாளில்
காய்ந்த சினப் பகைப் புலத்தைக்
கலந்து கடும் சமர்க் கடலை
நீந்துவார் நெடு நாள்கள் நிறை
வெம் போர்த் துறை விளைத்தார். 26
ஆய நாள் இடை இப்பால்
அணங்கு அனையாள் தனைப் பயந்த
தூயகுலப் புகழனார் தொன்று
தொடு நிலையாமை
மேய வினைப் பயத்தாலே இவ்
உலகை விட்டு அகலத்
தீய அரும் பிணி உழந்து விண்
உலகில் சென்று அடைந்தார். 27
மற்றவர் தாம் உயிர்
நீப்ப மனைவியார் மாதினியார்
சுற்றம் உடன் மக்களையும்
துகளாகவே நீத்துப்
பெற்றிமையால் உடன் என்றும்
பிரியாத உலகு எய்தும்
கற்பு நெறி வழுவாமல் கணவனார்
உடன் சென்றார். 28
தாதையாரும் பயந்த தாயாரும்
இறந்த அதன் பின்
மாதரார் திலகவதியாரும் அவர்
பின் வந்த
காதலனார் மருண் நீக்கியாரும்
மனக் கவலையினால்
பேது உறு நல் சுற்றமொடும்
பெரும் துயரில் அழுந்தினார். 29
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம்
தேற்றத் துயர் ஒழிந்து
பெரு வானம் அடைந்தவர்க்குச்
செய் கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்காய்
மலையப் போம் கலிப்பகையார்
பொருவாரும் போர்க் களத்தில் உயிர்
கொடுத்துப் புகழ் கொண்டார். 30
வெம் முனை மேல் கலிப்பகையார்
வேல் வேந்தன் ஏவப் போய்
அம் முனையில் பகை முருக்கி
அமர் உலகம் ஆள்வதற்குத்
தம் உடைய கடன் கழித்த
பெரு வார்த்தை தலம் சாற்றச்
செம்மலர் மேல் திரு
அனைய திலகவதியார் கேட்டார். 31
எந்தையும் எம் அனையும் அவர்க்கு
எனக் கொடுக்க இசைந்தார்கள்
அந்த முறையால் அவர்க்கே
உரியது நான் ஆதலினால்
இந்த உயிர் அவர் உயிரோடு
இசைவிப்பன் எனத் துணிய
வந்தவர் தம் அடி இணை மேல்
மருண் நீக்கியார் விழுந்தார். 32
அந் நிலையில் மிகப் புலம்பி
அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும் நான் உமை வணங்கப்
பெறுதலின் உயிர் தரித்தேன்
என்னை இனித் தனிக் கைவிட்டு
ஏகுவீர் எனில் யானும்
முன்னம் உயிர் நீப்பன் என
மொழிந்து இடரின் அழுந்தினார். 33
தம்பியார் உளர் ஆக வேண்டும்
என வைத்த தயா
உம்பர் உலகு அணைய உறு
நிலை விலக்க உயிர் தாங்கி
அம் பொன் மணி நூல் தாங்காது
அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி
இம்பர் மனைத் தவம்
புரிந்து திலகவதியார் இருந்தார். 34
மாசின் மனத் துயர் ஒழிய
மருண் நீக்கியார் நிரம்பித்
தேச நெறி நிலையாமை கண்டு
அறங்கள் செய்வார் ஆய்க்
காசினி மேல் புகழ் விளங்க
நிதி அளித்துக் கருணையினால்
ஆசில் அறச் சாலைகளும்
தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார். 35
கா வளர்த்தும் குளம்
தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து
அளித்தும் விருந்து அளித்தும்
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும்
நால் நிலத்து உள்ளோர்
யாவர்க்கும் தவிராத ஈகை
வினைத் துறை நின்றார். 36
நில்லாத உலகு இயல்பு
கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத்
துறந்து சமயங்களான வற்றின்
நல்லாறு தெரிந்துணர நம்பர்
அருளாமை யினால்
கொல்லாமை மறைந்து உறையும்
அமண் சமயம் குறுகுவார். 37
பாடலி புத்திரம் என்னும் பதி
அணைந்து சமண் பள்ளி
மாடணைந்தார் வல்லமணர் மருங்கு
அணைந்து மற்றவர்க்கு
வீடு அறியும் நெறி இதுவே
என மெய் போல் தங்களுடன்
கூடவரும் உணர்வு கொளக்
குறி பலவும் கொளுவினார். 38
அங்கு அவரும் அமண் சமயத்து அரும்
கலை நூல் ஆன எலாம்
பொங்கும் உணர்வுறப் பயின்றே அந்
நெறியில் புலன் சிறப்பத்
துங்க முழு உடல் சமணர்
சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத்
தங்களின் மேலாம் தரும சேனர்
எனும் பெயர் கொடுத்தார். 39
அத்துறையின் மீக் கூரும்
அமைதியினால் அகல் இடத்தில்
சித்த நிலை அறியாத தேரரையும்
வாதின் கண்
உய்த்த உணர்வினில் வென்றே உலகின்
கண் ஒளி உடைய
வித்தகராய் அமண் சமயத்
தலைமையினில் மேம் பட்டார். 40
அந் நெறியின் மிக்கார் அவர்
ஒழுக ஆன்ற தவச்
செந்நெறியின் வைகும்
திலகவதியார் தாமும்
தொன்னெறியின் சுற்றத் தொடர்பு
ஒழியத் தூய சிவ
நன்னெறியே சேர்வதற்கு நாதன்
தாள் நண்ணுவார். 41
பேராத பாசப் பிணிப்பு
ஒழியப் பிஞ்ஞகன் பால்
ஆராத அன்பு பெற
ஆதரித்த அம் மடவார்
நீரார் கெடில வட நீள்
கரையில் நீடு பெரும்
சீரார் திருவதிகை
வீரட்டானம் சேர்ந்தார். 42
சென்று திரு வீரட்டானத்து
இருந்த செம் பவளக்
குன்றை அடி பணிந்து
கோதில் சிவ சின்னம்
அன்று முதல் தாங்கி ஆர்வம்
உறத் தம் கையால்
துன்று திருப் பணிகள்
செய்யத் தொடங்கினார். 43
புலர்வதன் முன் திருவலகு பணி
மாறிப் புனி அகன்ற
நலம் மலி ஆன் சாணத்தால்
நன்கு திரு மெழுக்கிட்டு
மலர் கொய்து கொடு வந்து
மாலைகளும் தொடுத்து அமைத்துப்
பலர் புகழும் பண்பினால்
திருப்பணிகள் பல செய்தார். 44
நாளும் மிகும் பணி செய்து
குறைந்து அடையும் நன்னாளில்
கேளுறும் அன்புற ஒழுகும்
கேண்மையினார் பின் பிறந்தார்
கோளுறு தீவினை முந்தப் பர
சமயம் குறித்து அதற்கு
மூளும் மனக் கவலையினால் முற்ற
வரும் துயர் உழந்து. 45
தூண்டு தவ விளக்கு அனையார்
சுடர் ஒளியைத் தொழுது என்னை
ஆண்டு அருளும் நீராகில்
அடியேன் பின் வந்தவனை
ஈண்டு வினைப் பர சமயக்
குழி நின்றும் எடுத்து ஆள
வேண்டும் எனப் பல
முறையும் விண்ணப்பம் செய்தனரால். 46
தவம் என்று பாய் இடுக்கி
தலை பறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான்
வீழாமே அருளும் எனச்
சிவம் ஒன்று நெறி
நின்ற திலகவதியார் பரவப்
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார்
திரு உள்ளம் பற்றுவார். 47
மன்னு தபோ தனியார்க்குக் கனவின்
கண் மழ விடையார்
உன்னுடைய மனக் கவலை ஒழி
நீ உன் உடன் பிறந்தான்
முன்னமே முனியாகி எனை
அடையத் தவம் முயன்றான்
அன்னவனை இனிச் சூலை மடுத்து
ஆள்வம் என அருளி. 48
பண்டு புரி நல் தவத்துப்
பழுதின் அளவில் இறை வழுவும்
தொண்டரை ஆளத் தொடங்கும்
சூலை வேதனை தன்னைக்
கண் தரு நெற்றியர் அருளக் கடும்
கனல் போல் அடும் கொடிய
மண்டு பெரும் சூலை அவர்
வயிற்றின் இடைப் புக்கதால். 49
அடைவில் அமண் புரி தரும
சேனர் வயிற்று அடையும் அது
வட அனலும் கொடு
விடமும் வச்சிரவும் பிறவுமாம்
கொடிய எலாம் ஒன்றாகும் எனக்
குடரின் அகம் குடையப்
படர் உழந்து நடுங்கி அமண்
பாழியறை இடை விழுந்தார். 50
அச் சமயத்து இடைத் தாம்
முன் அதிகரித்து வாய்த்து வரும்
விச்சைகளால் தடுத்திடவும் மேல்
மேலும் மிக முடுகி
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி
எழ ஆங்கு அவர் தாம்
நச்சரவின் விடம் தலைக் கொண்டு
என மயங்கி நவையுற்றார். 51
அவர் நிலைமை கண்ட அதற்பின்
அமண் கையர் பலர் ஈண்டிக்
கவர் கின்ற விடம் போல் முன்
கண்டு அறியாக் கொடும் சூலை
இவர் தமக்கு வந்தது இனி
யாது செயல் என்று அழிந்தார்
தவம் என்று வினைப் பெருக்கிச்
சார்பு அல்லா நெறிசார்வார். 52
புண் தலைவன் முருட்டு அமணர்
புலர்ந்து செயல் அறியாது
குண்டிகை நீர் மந்திரித்துக்
குடிப்பித்தும் தணியாமை
கண்டு மிகப் பீலி கொடு
கால் அளவும் தடவி இடவும்
பண்டையினும் நோவு மிகப்
பரிபவத்தால் இடர் உழந்தார். 53
தாவாத புகழ்த் தரும
சேனருக்கு வந்த பிணி
ஓவாது நின்று இடலும்
ஒழியாமை உணர்ந்தாராய்
ஆ! ஆ! நாம் என் செய்கோம்
என்று அழிந்த மனத்தினராய்ப்
போவார்கள் இது நம்மால் போக்க
அரிதாம் எனப் புகன்று. 54
குண்டர்களும் கை விட்டார் கொடும்
சூலை மிசைக் கொண்டு
மண்டி மிக மேல் மேலும்
பெருகுதலால் மதி மயங்கிப்
பண்டை உறவு உணர்ந்தார்க்குத்
திலகவதியார் உளராகக்
கொண்டு அவர்பால் ஊட்டுவான்
தனைவிட்டார் குறிப்பு உணர்த்த. 55
ஆங்கு அவன் போய்த் திருவதிகை
தணை அடைய அரும் தவத்தார்
பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு
அணையக் கண்டு இறைஞ்சி
ஈங்கு யான் உமக்கு இளையார்
ஏவலினால் வந்தது எனத்
தீங்கு உளவோ என
வினவ மற்றவனும் செப்புவான். 56
கொல்லாது சூலை நோய்
குடர் முடக்கித் தீராமை
எல்லாரும் கை விட்டார் இது
செயல் என் முன் பிறந்த
நல்லாள் பால் சென்று இயம்பி
நான் உய்யும்படி கேட்டு இங்கு
அல்லாகும் பொழுது அணைவாய்
என்றார் என்று அறிவித்தான். 57
என்று அவன் முன் கூறுதலும் யான்
அங்கு உன் உடன் போந்து
நன்று அறியா அமண் பாழி
நண்ணுகிலேன் எனும் மாற்றம்
சென்று அவனுக்கு உரை
என்று திலகவதியார் மொழிய
அன்று அவனும் மீண்டு போய்ப்
புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். 58
அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு
எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என
ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இப் புன் சமயத்து
ஒழியா இத்துயர் ஒழியச்
செவ்வாறு சேர் திலக வதியார்
தாள் சேர்வன் என. 59
எடுத்த மனக் கருத்து உய்ய
எழுதலால் எழு முயற்சி
அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத்
திருவதிகை அணைவதனுக்கு
உடுத்து உழலும் பாய் ஒழிய
உறி உறு குண்டிகை ஒழியத்
தொடுத்த பீலியும் ஒழியப்
போவதற்குத் துணிந்து எழுந்தார். 60
பொய் தரும் மால் உள்ளத்துப்
புன் சமணர் இடம் கழிந்து
மெய் தருவான் நெறி அடைவார்
வெண் புடைவை மெய் சூழ்ந்து
கை தருவார் தமை ஊன்றிக்
காணாமே இரவின் கண்
செய் தவ மாதவர் வாழும்
திருவதிகை சென்று அடைவார். 61
சுலவி வயிற்று அகம் கனலும்
சூலை நோயுடன் தொடரக்
குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு
அணையக் குலவரை போன்று
இலகு மணி மதில் சோதி
எதிர் கொள் திருவதிகையினில்
திலக வதியார் இருந்த திரு
மடத்தைச் சென்று அணைந்தார். 62
வந்து அணைந்து திலகவதியார்
அடிமேல் உற வணங்கி
நம் தமது குலம் செய்த
நல் தவத்தின் பயன் அனையீர்
இந்த உடல் கொடும் சூலைக்
கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது
உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து
அருளும் என உரைத்து. 63
தாள் இணை மேல் விழுந்து
அயரும் தம்பியார் தமை நோக்கி
ஆள் உடைய தம் பெருமான்
அருள் நினைந்து கை தொழுது
கோளில் பரசமய நெறிக்
குழியில் விழுந்து அறியாது
மூளும் அரும் துயர் உழந்தீர்!
எழுந்தீர்! என மொழிந்தார். 64
மற்ற வுரை கேட்டலுமே
மருண் நீக்கியார் தாமும்
உற்ற பிணி உடல் நடுங்கி
எழுந்து தொழ உயர் தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணும்
இது கழல் அடைந்தோர்
பற்று அறுப்பார் தமைப் பணிந்து
பணி செய்வீர் எனப் பணித்தார். 65
என்ற பொழுது அவர் அருளை
எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன்
பேர் அருள் நினைந்து
சென்று திரு வீரட்டம்
புகுவதற்குத் திருக் கயிலைக்
குன்று உடையார் திரு நீற்றை
அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார். 66
திரு வாளன் திரு
நீறு திலகவதியார் அளிப்ப
பெரு வாழ்வு வந்தது எனப்
பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு
உருவார அணிந்து தமக்குற்ற
இடத்து உய்யும் நெறி
தருவாராய்த் தம் முன்பு வந்தார்
பின் தாம் வந்தார். 67
நீறு அணிந்தார் அகத்து இருளும்
நிறை கங்குல் புறத்து இருளும்
மாற வரும் திருப் பள்ளி
எழுச்சியினில் மாதவம் செய்
சீர் அடியார் திரு அலகும்
திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு
ஆறு அணிந்தார் கோயிலின் உள்
அடைந்தவரைக் கொடு புக்கார். 68
திரைக் கெடில வீரட்டானத்து
இருந்த செங்கனக
வரைச் சிலையார் பெரும் கோயில்
தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்
தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து
தம்பிரான் திரு அருளால்
உரைத் தமிழ் மாலைகள் சாத்தும்
உணர்வு பெற உணர்ந்து உரைப்பார். 69
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை
அன்பு உறுசிந்தையில் நேசம் மிக
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை
மருளும் பிணி மாயை அறுத்திடுவான்
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்
எனநீடிய கோதில் திருப்பதிகம்
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்
போமாறு எதிர் நின்று புகன்றனரால். 70
மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு
உற்று அடு சூலை மறப்பிணிதான்
அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும்
அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச்
செந் நின்ற பரம் பொருள் ஆனவர்
தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன் நின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன் கருணைக் கடல் மூழ்கினரே. 71
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப்
புளகம் கண் முகிழ்த்து அலரப்
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப்
புவிமீது விழுந்து புரண்டு அயர்வார்
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால்
ஏறாத பெருந்திடர் ஏறிட நின்
தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத்
தகுமோ என இன்னன தாம் மொழிவார். 72
பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்
இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல் எனத் தொழுவார். 73
மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர்
வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்று அலர் செந்தமிழின் சொல்
வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால்
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும்
நின்நன்நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான்
இடையே ஒருவாய்மை எழுந்ததுவே. 74
இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு
இறைஆகிய அன்பரும் இந்நெடுநாள்
சித்தம் திகழ் தீவினையேன் அடையும்
திருவோ இதுஎன்று தெருண்டு அறியா
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும்
கருணைத் திறமான அதன்
மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே
மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே. 75
பரசும் கருணைப் பெரியோன் அருளப்பறி
புன்தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது
எனாஅடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ்
முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால்
நெடுமா கடல் என்ன நிறைந்துளதே. 76
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர்
சீர்வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய்
விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும்
ஈறு இன்றி எழும் திருவாசகமும்
கையில் திகழும் உழவாரமுடன்
கைக்கொண்டு கலந்து கசிந்தனரே. 77
மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால்
விண்ணோர் தனி நாயகனார் கழலில்
தம் இச்சை நிரம்ப வரம் பெறும்
அத்தன்மைப் பதி மேவியதா பதியார்
பொய்மைச் சமயப் பிணி விட்டவர்
முன்போதும் பிணி விட்டருளிப் பொருளா
எம்மைப் பணிகொள் கருணைத் திறம்
இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே. 78
இன்ன தன்மையில் இவர்
சிவ நெறியினை எய்தி
மன்னு பேர் அருள் பெற்று
இடர் நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையில் பாடலி
புத்திர நகரில்
புன்மை யே புரி அமணர்
தாம் கேட்டு அது பொறாராய். 79
தரும சேனர்க்கு வந்த அத்
தடுப்ப அரும் சூலை
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின்
அவர் உய்யப் போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம்
பிணி ஒழித்து உய்ந்தார்
மருவு நம் பெரும் சமயம்
வீழ்ந்தது என மருள்வார். 80
மலையும் பல் சமயங்களும்
வென்று மற்றவரால்
நிலையும் பெற்ற இந்நெறி இனி
அழிந்தது என்று அழுங்கிக்
கொலையும் பொய்மையும் இலம்
என்று கொடுமையே புரிவோர்
தலையும் பீலியும் தாழ வந்து
ஒரு சிறை சார்ந்தார். 81
இவ்வகைப் பல அமணர்கள்
துயருன் ஈண்டி
மெய் வகைத் திறம்
அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு
சைவனாகி நம் விருத்தியும்
தவிர்க்கும் மற்று இனி நாம்
செய்வது என் என
வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார். 82
தவ்வை சைவத்து நிற்றலின்
தரும சேனரும் தாம்
பொய் வகுத்தது ஓர் சூலை
தீர்ந்திலது எனப் போய் இங்கு
எவ்வ மாக அங்கு எய்தி
நம் சமய அங்கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர்
எனச் சொலத் தெளிந்தார். 83
சொன்ன வண்ணமே செய்வது
துணிந்த துன் மதியோர்
முன்னம் நாம் சென்று
முறைப்படுவோம் என முயன்றே
இன்ன தன்மையில் இருள்
குழாம் செல்வது போல
மன்னன் ஆகிய பல்லவன்
நகரில் வந்து அணைந்தார். 84
உடை ஒழிந்து ஒரு பேச்சு
இடை இன்றி நின்று உண்போர்
கடை அணைந்தவன் வாயில்
காவலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்கு
அறிவியும் என்ன
இடை அறிந்து புக்க வரும்
தம் இறைவனுக்கு இசைப்பார். 85
அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய்
மிக அழிந்து
கொடி நுடங்கு திருவாயில் புறத்து
அணைந்தார் எனக் கூற
வடி நெடுவேல் மன்னவனும்
மற்றவர் சார்பு ஆதலினால்
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்
கொல் எனக் கவன்று உரைத்தான். 86
கடை காவல் உடையார்கள் புகுத
விடக் காவலன் பால்
நடை ஆடும் தொழில் உடையார்
நண்ணித் தாம் எண்ணியவாறு
உடையார் ஆகிய தரும
சேனர் பிணி உற்றாராய்ச்
சடையானுக்கு ஆளாய் நின்
சமயம் ஒழித்தார் என்றார். 87
விரை அலங்கல் பல்லவனும் அது
கேட்டு வெகுண்டு எழுந்து
புரை உடைய மனத்தினராய் போவதற்குப்
பொய்ப் பிணி கொண்டு
உரை சிறந்த சமயத்தை
அழித்து ஒழியப் பெறுவதே
கரையில் தவத்தீர் இதனுக்கு என்
செய்வது எனக் கனன்றான். 88
தலை நெறி ஆகிய சமயம்
தன்னை அழித்து உன்னுடைய
நிலை நின்ற தொல் வரம்பின்
நெறி அழித்த பொறி இலியை
அலை புரிவாய் எனப் பரவி
வாயால் அஞ்சாது உரைத்தார்
கொலை புரியா நிலை கொண்டு
பொய் ஒழுகும் அமண் குண்டர். 89
அருள் கொண்ட உணர்வு
இன்றி நெறிகோடி அறிவென்று
மருள் கொண்ட மன்னவனும்
மந்திரிகள் தமை நோக்கித்
தெருள் கொண்டோர் இவர்
சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
பொருள் கொண்டு விடாது என்
பால் கொடுவாரும் எனப் புகன்றான். 90
அரசனது பணிதலை நின்ற
அமைச்சர்களும் அந்நிலையே
முரசு அதிரும் தானையொடு முன்
சென்று முகில் சூழ்ந்து
விரை செறியும் சோலை சூழ்
திருவதிகை தனை மேவி
பரசமயப் பற்று அறுத்த
பான்மையினார் பால் சென்றார். 91
சென்று அணைந்த அமைச்சர் உடன்
சேனை வீரரும் சூழ்ந்து
மின் தயங்கு புரிவேணி
வேதியனார் அடியவரை
இன்று நுமை அரசன் அழைக்க
எமை விடுத்தான் போதும் என
நின்றவரை நேர் நோக்கி நிறை
தவத்தோர் உரை செய்வார். 92
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்
என்று எடுத்து நான்மறையின்
கோமானை நதியின் உடன் குளிர்
மதி வாழ் சடை யானைத்
தேமாலைச் செந்தமிழின் செழும்
திருத் தாண்டகம் பாடி
ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம்
என்று அருள் செய்தார். 93
ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட
வரும் அடி வணங்கி
வேண்டியவர்க் கொண்டு ஏக
விடை உகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான்
உளன் என்று இசைந்து இருந்தார்
மூண்ட சினப் போர் மன்னன்
முன் அணைந்து அங்கு அறிவித்தார். 94
பல்லவனும் அது கேட்டுப் பாங்கு
இருந்த பாய் உடுக்கை
வல் அமணர் தமை நோக்கி
மற்று அவனைச் செய்வது இனிச்
சொல்லும் என அறம் துறந்து
தமக்கு உறுதி அறியாத
புல் அறிவோர் அஞ்சாது நீற்று
அறையில் இடப் புகன்றார். 95
அருகு அணைந்தார் தமை நோக்கி
அவ் வண்ணம் செய்க எனப்
பெருகு சினக் கொடுங் கோலான்
மொழிந்திடலும் பெருந் தகையை
உருகு பெரும் தழல் வெம்மை
நீற்று அறையின் உள் இருத்தித்
திருகு கரும் தாள் கொளுவிச்
சேமங்கள் செய்து அமைத்தார். 96
ஆண்ட அரசு அதன் அகத்துள்
அணைந்த பொழுது அம்பலத்துத்
தாண்டவம் முன் புரிந்து அருளும்
தாள் நிழலைத் தலைக் கொண்டே
ஈண்டு வரும் துயர் உளவோ
ஈசன் அடியார்க்கு என்று
மூண்டமனம் நேர் நோக்கி
முதல்வனையே தொழுது இருந்தார். 97
வெய்ய நீற்று அறையது தான்
வீங்கு இளவேனில் பருவம்
தை வரும் தண் தென்றல் அணை
தண் கழுநீர்த் தடம் போன்று
மொய் ஒளி வெண் நிலவு
அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல்
அருள் ஆகி குளிர்ந்ததே. 98
மாசு இல் மதி நீடுபுனல்
மன்னி வளர் சென்னியனைப்
பேச இனியானை உலக
ஆளுடைய பிஞ்ஞகனை
ஈசனை எம்பெருமானை எவ்
உயிரும் தருவானை
ஆசை இல் ஆரா அமுதை
அடி வணங்கி இனிது இருந்தார். 99
ஓர் எழுநாள் கழிந்து அதன்பின்
உணர்வில் அமணரை அழைத்துப்
பாரும் இனி நீற்று அறையை
என உரைத்தான் பல்லவனும்
கார் இருண்ட குழாம் போலும்
உரு உடைய கார் அமணர்
தேரும் நிலை இல்லாதார்
நீற்று அறையைத் திறந்தார்கள். 100
ஆனந்த வெள்ளத்தின் இடை
மூழ்கி அம்பலவர்
தேன் உந்து மலர் பாதத்து
அமுது உண்டு தெளிவு எய்தி
ஊனம் தான் இலர் ஆகி
உவந்து இருந்தார் தமைக் கண்டே
ஈனம் தங்கியது இலதாம்
என்ன அதிசயம் என்றார். 101
அதிசயம் அன்றிது முன்னை
அமண் சமயச் சாதகத்தால்
இது செய்து பிழைத்து இருந்தான்
என வேந்தற்கு உரை செய்து
மதி செய்வது இனிக் கொடிய
வல் விடம் ஊட்டுவது என்று
முதிர வரும் பாதகத்தோர்
முடை வாயால் மொழிந்தார்கள். 102
ஆங்கு அது கேட்டலும் கொடிய
அமண் சார்பால்கெடு மன்னன்
ஓங்கு பெருமையினால் நஞ்சு
ஊட்டும் என உரைப்பத்
தேங்காதார் திருநாவுக்கரையரை அத்
தீய விடப்
பாங்கு உடைய பால் அடிசில்
அமுது செயப் பண்ணினார். 103
நஞ்சும் அமுது ஆம் எங்கள்
நாதன் அடியார்க்கு என்று
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார்
வஞ்சனையாம் படி அறிந்தே
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல்
உடையார் தீ விடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பால்
அடிசில் மிசைந்து இருந்தார். 104
பொடி ஆர்க்கும் திருமேனிப்
புனிதர்க்குப் புவனம்கள்
முடிவாக்கும் துயர் நீங்க
முன்னை விடம் அமுதானால்
படியார்க்கும் அறி அரிய
பசுபதியார் தம் உடைய
அடியார்க்கு நஞ்சு அமுதம்
ஆவது தான் அற்புதமோ. 105
அவ் விடத்தை ஆண்ட அரசு
அமுது செய்து முன் இருப்ப
வெவ் விடமும் அமுது ஆயிற்று
என அமணர் வெருக் கொண்டே
இவ் விடத்தில் இவன் பிழைக்கில்
எமக்கு எல்லாம் இறுதி எனத்
தெவ் விடத்துச் செயல்
புரியும் காவலற்குச் செப்புவார். 106
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம்
சமயத்தினில் விடம் தீர்
தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா
வகை தடுத்தான்
எஞ்சும் வகை அவற்கு இலதேல்
எம் உயிரும் நின் முறையும்
துஞ்சுவது திடம் என்றார் சூழ்
வினையின் துறை நின்றார். 107
மற்றவர் தம் மொழி கேட்டு
மதி கெட்ட மன்னவனும்
செற்ற அவனை இனிக் கடியும்
திறம் எவ்வாறு எனச் செப்ப
உற்றவரும் மந்திர சாதகம்
நாங்கள் ஒழித்திட நின்
கொற்ற வயக் களிற்று எதிரே
விடுவது எனக் கூறினார். 108
மா பாவிக் கடை
அமணர் வாகீசத் திருவடியாம்
கா பாலி அடியவர் பால்
கடக் களிற்றை விடுக என்னப்
பூ பாலர் செயல் மேற்கொள் புலைத்
தொழிலோன் அவர் தம் மேல்
கோ பாதி சயமான கொலைக்
களிற்றை விடச் சொன்னான். 109
கூடத்தைக் குத்தி ஒரு
குன்றம் எனப் புறப்பட்டு
மாடத்தை மறித்திட்டு மண்டபங்கள்
எடுத்து எற்றித்
தாடத்தில் பரிக்காரர் தலை
இடறிக் கடக் களிற்றின்
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது
ஒரு விறல் வேழம். 110
பாசத் தொடை நிகளத்
தொடர்பறியத் தறி முறியா
மீ சுற்றிய பறவைக்
குலம் வெருவத் துணிவிலகா
ஊசல் கரம் எதிர் சுற்றிட
உரறிப் பரி உழறா
வாசக் கட மழை முற்பட
மதவெற்பு எதிர் வருமால். 111
இடி உற்று எழும் ஒலியில்
திசை இப உட்கிட அடியில்
படி புக்கு உற நெளியப்
படர் பவனக் கதி விசையில்
கடிது உற்று அடு செயலில்
கிளர் கடலில் படு கடையின்
முடிவில் கனல் என முன்
சினம் முடுகிக் கடுகியதே. 112
மாடு உற்று அணை இவுளிக்
குலம் மறியச் செறி வயிரக்
கோடுற்று இரு பிளவிட்டு அறு
குறை கைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப்
புடை அணி செற்று
ஆடுற்று அகல் வெளியுற்று அது
அவ்வடர் கைக்குல வரையே. 113
பாவக் கொடு வினை முற்றிய
படிறுற்று அடு கொடியோர்
நாவுக்கரசர் எதிர் முற்கொடு
நணுகிக் கருவரை போல்
ஏவிச் செறு பொருகைக்
கரியினை உய்த்திட வெருளார்
சேவிற்று திகழ்பவர் பொன் கழல்
தெளிவு உற்றனர் பெரியோர். 114
அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை
தம் மேல் வரக் கண்டு
விண்ணவர் தம் பெருமானை விடை
உகந்து ஏறும் பிரானைச்
சுண்ண வெண் சந்தனச் சாந்து
தொடுத்த திருப் பதிகத்தை
மண் உலகு உய்ய எடுத்து
மகிழ் உடனே பாடுகின்றார். 115
வஞ்சகர் விட்ட சினப் போர்
மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள் முடிக் கூத்தர்
தேவர்க்கும் தேவர் பிரானார்
வெம்ஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர்
தம் அடியோம் நாம்
அஞ்சுவது இல்லை என்று என்றே
அருந்தமிழ் பாடி உறைந்தார். 116
தண் தமிழ் மாலைகள் பாடித்
தம் பெருமான் சரணாகக்
கொண்ட கருத்தில் இருந்து
குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து
எதிர் தாழ்ந்து நிலத்தில்
எண் திசையோர்களும் காண
இறைஞ்சி எழுந்தது வேழம். 117
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி
அவ் வேழம் பெயரத்
தூண்டிய மேல் மறப் பாகர்
தொடக்கி அடத்துத் திரித்து
மீண்டும் அதனை அவர் மேல்
மிறை செய்து காட்டிட வீசி
ஈண்டு அவர் தங்களையே கொன்று
அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே. 118
ஓடி அருகர்கள் தம்மை
உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையும் கொன்று
நகரம் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும்
நெடும் மந்தரகிரி போல
ஆடி அவ் யானையும் மன்னற்கு
ஆகுலம் ஆக்கியது அன்றே. 119
யானையின் கையில் பிழைத்த வினை
அமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கி
வருந்திய சிந்தையர் ஆகித்
தானை நில மன்னன் தாளில்
தனித் தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு
இனிச் செய்வது என் என்றான். 120
நங்கள் சமயத்தின் நின்றே
நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால்
இவ் வண்ணம் நின் சீர்
பங்கப் படுத்தவன் போகப்
பரிபவம் தீரும் உனக்குப்
பொங்கழல் போக அதன் பின்
புகை அகன்றால் என என்றார். 121
அல்லிருள் அன்னவர் கூற அரும்
பெரும் பாவத்தவன் தான்
தொல்லைச் சமயம் அழித்துத்
துயரம் விளைத்தவன் தன்னைச்
சொல்லும் இனிச் செய்வது என்னச்
சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக் கடல்
இடைப் பாய்ச்சுவது என்றார். 122
ஆங்கு அது கேட்ட அரசன்
அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம்
உறக் கொடு போகிப்
பாங்கு ஒரு கல்லில் அணைத்துப்
பாசம் பிணித்து ஓர் படகில்
வீங்கு ஒலி வேலையில் எற்றி
வீழ்த்துமின் என்று விடுத்தான். 123
அவ் வினை செய்திடப் போகும்
அவருடன் போயர் உகந்த
வெவ்வினை யாளரும் சென்று
மேவிட நாவுக்கரசர்
செவ்விய தம் திரு உள்ளம்
சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி
முடித்தார் அப்பாதகர். 124
அப்பரிசு அவ்வினை முற்றி அவர்
அகன்று ஏகிய பின்னர்
ஒப்பரும் ஆழ் கடல் புக்க
உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரிசு ஆயினும் ஆக
ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண் தமிழ் தன்னால்
சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார். 125
சொல் துணை வேதியன்
என்னும் தூய் மொழி
நல் தமிழ் மாலை
ஆம் நமச்சிவாய என்று
அற்ற முன் காக்கும்
அஞ்சு எழுத்தை அன்பொடு
பற்றி உணர்வினால்
பதிகம் பாடினார். 126
பெருகிய அன்பினர்
பிடித்த பெற்றியால்
அருமலரோன் முதல்
அமரர் வாழ்த்துதற்கு
அரிய அஞ்சு எழுத்தையும்
அரசு போற்றிடக்
கரு நெடுங்கடலின்
உட் கல் மிதந்ததே. 127
அப் பெருங்கல்லும் அங்கு
அரசு மேல் கொளத்
தெப்ப மாய் மிதத்தலில்
செறிந்த பாசமும்
தப்பியது அதன் மிசை
இருந்த தாவில் சீர்
மெய்ப் பெரும் தொண்டனார்
விளங்கித் தோன்றினார். 128
இருவினைப் பாசமும்
மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில் வீழ்
மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்செழுத்து
அரசை இக்கடல்
ஒரு கல் மேல் ஏற்று
இடல் உரைக்க வேண்டுமோ. 129
அருள் நயந்து அஞ்செழுத்து
ஏத்தப் பெற்ற அக்
கருணை நாவரசினைத்
திரைக் கரங்களால்
தெருள் நெறி நீர்மையின்
சிரத்தில் தாங்கிட
வருணனும் செய்தனன் முன்பு
மா தவம். 130
வாய்ந்த சீர் வருணனே
வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே
சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து
அருள் வித்தனன்
பூந்திருப் பாதிரிப்
புலியூர்ப் பாங்கரில். 131
அத் திருப் பதியினில்
அணைந்த அன்பரை
மெய்த் தவக் குழாம்
எலாம் மேவி ஆர்த்தெழ
எத் திசையைனும் அர
என்னும் ஓசைபோல்
தத்து நீர்ப் பெருங்கடல்
தானும் ஆர்த்ததே. 132
தொழும் தகை நாவினுக்கு
அரசும் தொண்டர் முன்
செழும் திருப் பாதிரிப்
புலியூர்த் திங்கள் வெண்
கொழுந்து அணி சடையாரைக்
கும்பிட்டு அன்புற
விழுந்து எழுந்து அருள்
நெறி விளங்கப் பாடுவார். 133
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும்
ஆகி என எடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்
அடியோங் கட்கு என்று
வான் தாழ் புனல் கங்கை வாழ்
சடையானை மற்று எவ் உயிர்க்கும்
சான்றாம் ஒருவனைத் தண்
தமிழ் மாலைகள் சாத்தினரே. 134
மற்றும் இணையன வண் தமிழ்
மாலைகள் பாடி வைகி
வெற்றி மழவிடை வீரட்டர்
பாதம் மிக நினைவால்
உற்றதொர் காதலின் அங்கு நின்று
ஏகி ஒன்னார் புரங்கள்
செற்றவர் வாழும் திருவதிகைப்
பதி சென்று அடைவார். 135
தேவர் பிரான் திரு மாணிக்
குழியும் தினை நகரும்
மேவினர் சென்று விரும்பிய சொல்
மலர் கொண்டு இறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி
புல்லப் பொருள் மொழியின்
காவலர் செல்வத் திருக்
கெடிலத்தைக் கடந்து அணைந்தார். 136
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த
தீயம் இறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன்
தமிழ் ஈசர் எழுந்து அருள
மஞ்சிவர் மாடத் திருவதிகைப்
பதி வாணர் எல்லாம்
தம் செயல் பொங்கத் தழங்கு
ஒலி மங்கலம் சாற்றல் உற்றார். 137
மணி நெடுந் தோரணம் வண்
குலைப் பூகம் மடற் கதலி
இணையுற நாட்டி எழு நிலைக்
கோபுரம் தெற்றி எங்கும்
தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச்
செஞ் சாந்து நீவி
அணி நகர் முன்னை அணி
மேல் அணி செய்து அலங்கரித்தார். 138
மன்னிய அன்பின் வள நகர்
மாந்தர் வயங்கு இழையார்
இன்னிய நாதமும் ஏழ் இசை
ஓசையும் எங்கும் விம்மப்
பொன் இயல் சுண்ணமும் பூவும்
பொரிகளும் தூவி எங்கும்
தொல் நகரின் புறம் சூழ்ந்து
எதிர் கொண்டனர் தொண்டரையே. 139
தூய வெண் நீறு துதைந்த
பொன் மேனியும் தாழ் வடமும்
நாயகன் சேவடி தைவரும்
சிந்தையும் நைந்து உருகிப்
பாய்வது போல் அன்பு நீர் பொழி
கண்ணும் பதிகச் செஞ் சொல்
மேய செவ்வாயும் உடையார்
புகுந்தனர் வீதி உள்ளே. 140
கண்டார்கள் கை தலைமேல் குவித்து
இந்தக் கருணை கண்டால்
மிண்டாய செங்கை அமண்கையர்
தீங்கு விளைக்கச் செற்றம்
உண்டா யினவண்ணம் எவ் வண்ணம்
என்று உரைப்பார்கள் பின்னும்
தொண்டு ஆண்டு கொண்ட
பிரானைத் தொழுது துதித்தனரே. 141
இவ் வண்ணம் போல எனைப்
பல மாக்கள் இயம்பி ஏத்த
மெய் வண்ண நீற்று ஒளி
மேவும் குழாங்கள் விரவிச் செல்ல
அவ் வண்ணம் நண்ணிய அன்பரும்
வந்து எய்தி அம்பவளச்
செவ் வண்ணர் கோயில்
திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே. 142
உம்பர் தம் கோனை உடைய
பிரானை உள் புக்கு இறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு
காதலினால் திளைத்தே
எம் பெருமான் தனை ஏழையேன்
நான் பண்டு இகழ்ந்தது என்று
தம் பரிவால் திருத் தாண்டகச்
செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார். 143
அரி அயனுக்கு அரியானை
அடியவருக்கு எளியானை
விரி புனல் சூழ் திருவதிகை
வீரட்டானத்து அமுதைத்
தெரிவரிய பெரும் தன்மைத்
திருநாவுக் கரசு மனம்
பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப்
பணி செயும் நாள். 144
புல் அறிவில் சமணர்க்காப்
பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினைப்
பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி
ஆண்ட அரசினைப் பணிந்து
வல்லமணர் தமை நீத்து
மழவிடையோன் தாள் அடைந்தான். 145
வீடு அறியாச் சமணர் மொழி
பொய் என்று மெய் உணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்
கண் கண் நுதற்குப்
பாடலி புத்திரத்தில் அமண்
பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து
குண பரவீச்சரம் எடுத்தான். 146
இந் நாளில் திருப்பணிகள்
செய்கின்ற இன் தமிழுக்கு
மன்னான வாகீசத் திருமுனியும்
மதிச் சடைமேல்
பன்னாகம் அணிந்தவர் தம் பதி
பலவும் சென்று இறைஞ்சிச்
சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு
செய்வான் தொடர்ந்து எழுவார். 147
திருவதிகைப் பதி மருங்கு
திரு வெண்ணெய் நல்லூரும்
அருளும் திரு ஆமாத்தூர்
திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி
வளத் தமிழ் பாடிப்
பெருகு விருப்புடன் விடையார்
மகிழ் பெண்ணாகடம் அணைந்தார். 148
கார் வளரும் மாடங்கள் கலந்த
மறை ஒலி வளர்க்கும்
சீர் உடை அந்தணர் வாழும்
செழும் பதியின் அகத்து எய்தி
வார் சடையார் மன்னு
திருத் தூங்கானை மாடத்தைப்
பார் பரவும் திருமுனிவர்
பணிந்து ஏத்திப் பரவினார். 149
புன் நெறியாம் அமண் சமயத்
தொடக்குண்டு போந்தவுடன்
தன்னுடனே உயிர்வாழத் தரியேன்
நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை
இட்டு அருள் என்று
பன்னு செழுந்தமிழ் மாலை
முன் நின்று பாடுவார். 150
பொன் ஆர்ந்த திருவடிக்கு என்
விண்ணப்பம் என்று எடுத்து
முன் ஆகி எப்
பொருட்கும் முடிவாகி நின்றானைத்
தன் ஆகத்து உமை
பாகம் கொண்டானைச் சங்கரனை
நல் நாமத் திருவிருத்தம்
நலம் சிறக்கப் பாடுதலும். 151
நீடு திருத் தூங்கானை
மாடத்து நிலவு கின்ற
ஆடக மேருச் சிலையான்
அருளால் ஓர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே வாகீசர்
திருத் தோலில்
சேடுயர் மூவிலைச் சூலம் சின
விடையின் உடன் சாத்த. 152
ஆங்கவர் தம் திருத் தோளில்
ஆர்ந்த திரு இலச்சினையைத்
தாம் கண்டு மனம் களித்துத் தம்
பெருமான் அருள் நினைந்து
தூங்கருவி கண் பொழியத்
தொழுது விழுந்து ஆர்வத்தால்
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து
ஒழிந்தேன் என எழுந்தார். 153
தூங்கானை மாடத்துச் சுடர்க்
கொழுந்தின் அடிபரவிப்
பாங்காகத் திருத் தொண்டு செய்து
பயின்று அமரும் நாள்
பூங்கானம் மணம் கமழும் பொருவில்
திரு அரத் துறையும்
தேங்காவின் முகில் உறங்கும்
திருமுது குன்றமும் பணிந்து. 154
வண்தமிழ் மென் மலர்
மாலை புனைந்தருளி மருங்குள்ள
தண் துறை நீர்ப் பதிகளிலும்
தனி விடையார் மேவி இடம்
கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக்
குண திசை மேல்
புண்டரிகத் தடம் சூழ்ந்த
நிவாக் கரையே போதுவார். 155
ஆனாத சீர்த் தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடை பரக்கும் மலர்ச்
சடையார் அடி வணங்கி
ஊனாலும் உயிராலும் உள்ள
பயன் கொள நினைந்து
தேனாரும் மலர்ச் சோலைத்
திருப்புலியூர் மருங்கு அணைந்தார். 156
நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம்
ஆடிய திரு எல்லை பால்
மேவித் தலம் உற மெய்யில் தொழுத
பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும்
காவில் களி மயில் மகிழ் உற்று எதிர்
எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
மருதத் தண்பணை வழி வந்தார். 157
முருகில் செறி இதழ் முளரிப் படுகரில்
முது மேதிகள் புதுமலர் மேயும்
அருகில் செறிவனம் என மிக்குயர் கழை
அளவில் பெருகிட வளர் இக்குப்
பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன
பெரியோர் அவர் திருவடிவைக் கண்டு
உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன
என முன்புள வள வயல் எங்கும். 158
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை
வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகை நெறி விடுவீர்
இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம்
பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில்
சூழ் சினை மிசை குயில் கூவும்
செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு
திரு நந்தன வனம் எதிர் கண்டார். 159
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு
அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும்
நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம்
இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம்
என வந்து எதிர் அரகர என்றே
சிவ முன் பயில் மொழி பகர் கின்றன
வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை. 160
அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும்
அவரும் தொழுது முன் அளிகூரும்
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும்
நிறை அன்பொடும் உரை தடுமாறச்
செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில்
தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில்
பொலி நெடு மதில் சூழ் குடதிசை
மணி வாயில் புறம் வந்துற்றார். 161
அல்லல் பவம் அற அருளும் தவ
முதல் அடியார் எதிர் கொள அவரோடும்
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின்
வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார்
கல்வித் துறை பல வரு மா மறை முதல்
கரை கண்டு உடையவர் கழல் பேணும்
செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை
வளர் சிவமே நிலவிய திருவீதி. 162
நவ மின் சுடர் மணி நெடு மாலையும்
நறு மலர் மாலையும் நிறை திருவீதிப்
புவனங்களின் முதல் இமையோர் தடமுடி
பொருந்திய மணி போகட்டிப்
பவனன் பணி செய வருணன் புனல் கொடு
பணி மாறவும் அவை பழுதாம் என்று
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு
இடுவார் குளிர்புனல் விடுவார்கள். 163
மேலம் பரதலம் நிறையும் கொடிகளில்
விரிவெங்கதிர் நுழைவது அரிதாகும்
கோலம் பெருகிய திருவீதியை முறை
குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு
ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம்
உறமெய் கொடு தொழுதுள்புக்கார். 164
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை
வலம் வந்து அலமரு வரை நில்லா
அளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும்
அன்பின் கடல் நிறை உடல் எங்கும்
புளகச் செறி நிரை விரவத் திருமலி
பொன்கோபுரம் அது புகுவார் முன்
களனில் பொலிவிடம் உடையார் நடநவில்
கனகப் பொது எதிர் கண்ணுற்றார். 165
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி
நிறை அம்பலம் நினைவுற நேரே
கூடும் படி வரும் அன்பால் இன்புறு
குணம் முன் பெறவரு நிலை கூடத்
தேடும் பிரமனும் மாலும் தேவரும்
முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா
ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம்
ஆரா வகை தொழுது ஆர்கின்றார். 166
கையும் தலை மிசை புனை அஞ்சலியன
கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும்
உடன் உருகும் பரிவின
பேறுஎய்தும் மெய்யும் தரைமிசை விழுமுன்
பெழுதரும் மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர்
ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால். 167
இத் தன்மையர் பல முறையும் தொழுது
எழஎன்று எய்தினை என மன்றாடும்
அத்தன் திரு அருள் பொழியும் கருணையின்
அருள் பெற்றிட வரும் ஆனந்தம்
மெய்த் தன்மை யினில் விருத்தத் திருமொழி
பாடிப் பின்னையும் மேல் மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
திருநேரிசை மொழி பகர்கின்றார். 168
பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று
முன் எடுத்துப் பண்ணால்
அத்தா உன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்தவாறு என்று
இத்திறம் போற்றி நின்றே இன்
தமிழ் மாலைப் பாடி
கைத் திருத் தொண்டு செய்யும்
காதலில் பணிந்து போந்தார். 169
நீடிய மணியின் சோதி நிறை
திரு முன்றின் மாடும்
ஆடு உயர் கொடி சூழ் பொன்
தேர் அணி திரு வீதி உள்ளும்
கூடிய பணிகள் செய்து
கும்பிடும் தொழிலர் ஆகிப்
பாடிய புனித வாக்கின்
பணிகளும் பயிலச் செய்வார். 170
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க
அன்னம் பாலிக்கும் என்னும்
திருக் குறுந் தொகைகள் பாடித்
திரு உழவாரங் கொண்டு
பெருத்து எழு காதலோடும் பெரும்
திருத் தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர்
வெண்ணீற்று வண்டலாட. 171
மேவிய பணிகள் செய்து
விளங்குநாள் வேட்களத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச் சென்று
முன் வணங்கிப் பாடிக்
காவியம் கண்டார் மன்னும்
திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக்கு அரசர் சென்று
நண்ணினார் மண்ணோர் வாழ. 172
சின விடை யேறுகைத் தோறும்
மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
வன பவள வாய்திறந்து வானவர்க்கும்
தான் அவனே என்கின்றாள் என்று
அனைய திருப்பதிகம் உடன் அன்புறு
வண்தமிழ் பாடி அங்கு வைகி
நினைவரியார் தமைப் போற்றி
நீடுதிருப்புலியூரை நினைந்து மீள்வார். 173
மனைப் படப்பில் கடல் கொழுந்து வளைசொரியும்
கழிப் பாலை மருங்கு நீங்கி
நனைச்சினை மென் குளிஞாழல் பொழில்
ஊடுவழி கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு
அருளும் அம்பலத்து நிருத்தனாரைத்
தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ
எனப்பாடி தில்லை சார்ந்தார். 174
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு
எளியானை அவர்தம் சிந்தை
பிரியாத பெரிய திருத் தாண்டகச்
செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி
விரியா நின்று எவ் உலகும் விளங்கிய
பொன் அம்பலத்து மேலி ஆடல்
புரியா நின்றவர் தம்மைப் பணிந்து
தமிழால் பின்னும் போற்றல் செய்வார். 175
செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா
எறிக்கும் எனும் சிறந்த வாய்மை
அருஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயமாம்
படி பாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சு உருகப் பொழி புனல்வார் கண்
இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்
தம் செயலின் ஒழியாத திருப்பணியும்
மாறாது சாரும் நாளில். 176
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த
திருக்கழுமலத்தின் இருந்த செம்கண்
விடை உகைத்தார் திரு அருளால்
வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும்
அடைய நிறை சிவம் பெருக வளர்
ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த
உடைய மறைப் பிள்ளையார் திருவார்த்தை
அடியார்கள் உரைப்பக் கேட்டார். 177
ஆழிவிடம் உண்ட வரை அம்மை
திருப்பால் அமுதம் உண்ட போதே
ஏழ் இசை வண் தமிழ் மாலை
இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல
காழி வரும் பெரும் தகை
சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர
வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு
மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த. 178
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல்
வணங்கி அருள் முன் பெற்றுப்
பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி
புரண்டு வலம் கொண்டு போந்தே
எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திரு நாரையூர்
பணிந்து பாடிச் செல்வார். 179
தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத
கரத்தொடு நீறு துதைந்த கோலம்
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து
உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத்
தெண் திரைவாய்க் கல் மிதப்பில்
உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்
வண் தமிழால் எழுது மறை மொழிந்த
பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார். 180
நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை
மடுத்து அருளி நேரே முன்னாள்
ஆண்ட அரசு எழுந்து அருளக்
கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும்
காண்டகைய பெரு விருப்புக் கைம்
மிக்க திருஉள்ளக் கருத்தினோடு
மூண்ட அருள் மனத்து அன்பர் புடை
சூழ எழுந்து அருளி முன்னே வந்தார். 181
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு
உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப்
பணிந்தவர்தம் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையால் எடுத்து இறைஞ்சி
விடையின் மேல் வருவார்தம்மை
அழுது அழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே
என அவரும் அடியேன் என்றார். 182
அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத
ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு அரசர்
எனச் சிறந்த சீர்த்தி
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில்
அரன் அடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம்
பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம். 183
பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று
அரசு உவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமை வணங்கப்
பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளம் நிறை காதலினால் ஒருவர்
ஒருவரில் கலந்த உண்மை யோடும்
வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார்
கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் . 184
அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம்
அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருள் சமய முதல் சைவ நெறி தான்
பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம்
ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்
தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று
செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே. 185
பண் பயில் வண்டு அறை சோலை சூழும்
காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு
விண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை
வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச்
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள்
தம்பிரானாரை நீர் பாடீர் என்னக்
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை
கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி. 186
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்று
இருந்து அருளும் பிரான் முன் நின்று
பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும்
பார்கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் தம்
திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல்
வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில். 187
அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய
மகிழ்ச்சி அளவு இலாத
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில்
திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில்
மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி நாட்டு
மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு
விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார். 188
ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக்
காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு
மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு
இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடூர் நீடு
திருக்குறுக்கை திரு நின்றி யூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார். 189
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து
விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக்
காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்கரைத்
துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப்
பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து
பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார். 190
ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற
அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து
மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும்
சந்தவிருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு
பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித்
தாமம்பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும்
பூ வலயத்தவர் பரவப் பல நாள் தங்கிப்
புரிஉறு கைத்தொண்டு போற்றிச் செய்வார். 191
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப்
பொன்னி இடைமருதைச் சென்று எய்திஅன்பினோடு
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி
வண்தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்
பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப்
போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து
செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு
எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார். 192
சென்று சேர்ந்து திருச் சத்தி
முற்றத்து இருந்த சிவக் கொழுந்தை
குன்ற மகள் தன் மனக் காதல்
குலவும் பூசை கொண்டு அருளும்
என்றும் இனிய பெருமானை
இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்து தமிழ்
மொழி மாலைகளும் சாத்துவார். 193
கோவாய் முடுகி என்று எடுத்துக்
கூற்றம் வந்து குமைப்பதன் முன்
பூவார் அடிகள் என்று அலைமேல்
பொறித்து வைப்பாய் எனப் புகன்று
நாவார் பதிகம் பாடுதலும்
நாதன் தானும் நல்லூரில்
வா வா என்றே அருள்
செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர். 194
நன்மை பெருகஅருள் நெறியே
வந்து அணைந்து நல்லூரின்
மன்னு திருத் தொண்டனார் வணங்கி
மகிழ்ந்து எழும் பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம்
என்று அவர்தம்
சென்னி மிசைப் பாத
மலர் சூட்டினான் சிவபெருமான். 195
நனைந்தனைய திருவடி என்தலைமேல்
வைத்தார் என்று
புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி
இசைத்துப் புனிதர் அருள்
நினைந்து உருகி விழுந்து எழுந்து
நிறைந்து மலர்ந்து ஒழியாத
தனம் பெரிதும் பெற்று வந்த
வறியோன் போல் மனம் தழைத்தார் . 196
நாவுக்கு மன்னர் திரு
நல்லூரில் நம்பர் பால்
மேவுற்ற திருப் பணிகள்
மேவுற நாளும் செய்து
பாவுற்ற தமிழ் மாலை பல
பாடிப் பணிந்து ஏத்தித்
தேவுற்ற திருத்தொண்டு செய்து
ஒழுகி செல்லு நாள் . 197
கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன்
அமர்ந்து அருளும்
திருவாவூர் திருப் பாலைத்துறை
பிறவும் சென்று இறைஞ்சிப்
பெருகு ஆர்வத் திருத் தொண்டு
செய்து பெருந்திரு நல்லூர்
ஒரு காலும் பிரியாதே
உள் உருகிப் பணிகின்றார். 198
ஆளுடைய நாயகன் தன் அருள்
பெற்று அங்கு அகன்று போய்
வாளை பாய் புனல் பழனத்
திருப் பழனம் மருங்கு அணைந்து
காளவிடம் உண்டு இருண்ட கண்டர்
பணிக் கலன் பூண்டு
நீள் இரவில் ஆடுவார் கழல்
வணங்க நேர் பெற்றார். 199
அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில்
அரனார் மகிழும்
ஒப்பரிய தானங்கள் உள்
உருகிப் பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர்
தாம் மேவினார்
செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள்
ஊர் திங்களூர். 200
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்
தம் தனயருடன் சாலை கூவல்
குளம் தரு தண்ணீர்ப்
பந்தர் பல ஆண்ட அரசு
எனும் பெயரால் பண்ணினமை
வந்து அணைந்த வாகீசர் கேட்டு
அவர் தம் மனை நண்ண. 201
மற்றவரும் மனம் மகிழ்ந்து
மனைவியார் மைந்தர் பெரும்
சுற்றமுடன் களி கூரத் தொழுது
எழுந்து சூழ்ந்து மொழிக்
கொற்றவரை அமுது செயக்
குறை கொள்வார் இறைகொள்ளப்
பெற்ற பெரும் தவத் தொண்டர்
திரு உள்ளம் பெறப் பெற்றார். 202
காண்டகைமை இன்றியுமுன் கலந்த
பெருங் கேண்மையினார்
பூண்ட பெரும் காதலுடன்
போனகமும் கறி அமுதும்
வேண்டுவன வெவ்வேறு விதங்கள்
பெற விருப்பினால்
ஆண்ட அரசு அமுது செயத்
திரு அமுதாம் படி அமைத்து. 203
திருநாவுக்கரசு அமுது செய்து
அருள மற்றவர் தம்
பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை
அழைத்து அன்பு
தருஞானத் திருமறையோர்
தண்டலையின் வண்கதலிக்
குரு நாளக் குருத்து அரிந்து
கொண்டு வர தனிவிட்டார். 204
ஆங்கு அவனும் விரைந்து
எய்தி அம்மருங்கு தாழாதே
பூங் கதலிக் குருத்து அரியப்
புகும் அளவில் ஒரு நாகம்
தீங்கு இழைக்க அது பேணான்
திரு அமுது செய்து அருள
ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு
ஒல்லை வந்து அணைந்தான். 205
தீய விடம் தலைக் கொள்ளத்
தெருமந்து செழும் குருத்தைத்
தாய கரத்தினில் நீட்டித் தளர்ந்து
தனைத் தழல் நாகம்
மேயபடி உரை செய்யான் விழக்
கண்டு கெட்டு ஒழிந்தோம்
தூயவர் இங்கு அமுது செயத்
தொடங்கார் என்று அது ஒளித்தார். 206
தம் புதல்வன் சவம்
மறைத்துத் தடுமாற்றம் இலராகி
எம் பெருமான் அமுது செய
வேண்டும் என வந்து இறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர்
உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்து
அருளி நவை தீர்ப்பார். 207
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு
அளவு இறந்த கருணையராய்க்
கொன்றை நறும் சடையார் தம்
கோயிலின் முன் கொணர்வித்தே
ஒன்று கொலாம் எனப் பதிகம்
எடுத்து உடையான் சீர் பாடப்
பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை
உணர்ந்து எழுந்து இருந்தான். 208
அரும் தனயன் உயிர் பெற்ற
அது கண்டும் அமுது செயாது
இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர்
உழந்தார் துயர் நீங்க
வருந்தும் அவர் மனைப்
புகுந்து வாகீசத் திருமுனிவர்
விருந்து அமுது செய்து அருளி
விருப்பினுடன் மேவும் நாள். 209
திங்களூர் தனில் நின்றும்
திருமறையோர் பின் செல்லப்
பைங்கண் விடைத் தனிப்பாகர்
திருப்பழனப் பதி புகுந்து
தங்கு பெரும் காதலொடும்
தம் பெருமான் கழல் சார்ந்து
பொங்கிய அன்புற வணங்கி முன்
நின்று போற்றி இசைப்பார். 210
புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார்
பொன் கழல் கீழ்
அடை மாலைச் சீலம் உடை
அப்பூதி அடிகள் தமை
நடைமாணச் சிறப்பித்து நன்மை
புரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச்
சொன்மாலை பாடினார். 211
எழும் பணியும் இளம்பிறையும்
அணிந்தவரை எம் மருங்கும்
தொழும்பணி மேற் கொண்டு அருளி
திருச்சோற்றுத் துறை முதலாத்
தழும்புறு கேண்மையில் நண்ணித்
தானங்கள் பல பாடிச்
செம்பழனத்து இறை கோயில் திருத்
தொண்டு செய்து இருந்தார். 212
சால நாள் அங்கு அமர்ந்து
தம் தலைமேல் தாள் வைத்த
ஆலமார் மணி மிடற்றார் அணி
மலர்ச் சேவடி நினைந்து
சேலுலாம் புனல் பொன்னித்
தென்கரை ஏறிச் சென்று
கோல நீள் மணி மாடத்
திரு நல்லூர் குறுகினார். 213
அங்கு அணைந்து தம் பெருமான்
அடி வணங்கி ஆராது
பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி
இசைத்துப் பணி செயும் நாள்
தங்கு பெரும் காதலினால்
தாமரை மேல் விரிஞ்சனொடு
செங்கண் மால் அறிவரியார்
திருவாரூர் தொழ நினைந்தார். 214
நல்லூரில் நம்பர் அருள்
பெற்றுப் போய்ப் பழையாறை
பல்லூர் வெண்டலைக் கரத்தார்
பயிலும் இடம் பல பணிந்து
சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ்
சுழியைத் தொழுது ஏத்தி
அல்லூர் வெண் பிறை அணிந்தார்
திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி. 215
நாலூர் தென் திருச்சேறை
குடவாயில் நறையூர் சேர்
பாலூரும் இன் மொழியாள்
பாகனார் கழல் பரவி
மேலூர்தி விடைக் கொடியார் மேவும்
இடம் பல பாடிக்
சேலூர் தண் பணை சூழ்ந்த
தென் திரு வாஞ்சியம் அணைந்தார். 216
பெருவாச மலர்ச் சோலைப் பெரு
வேளூர் பணிந்து ஏத்தி
முருகாரும் மலர்க் கொன்றை
முதல்வனார் பதி பிறவும்
திருவாரும் விளமருடன் சென்று
இறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம்
திருவாரூர் வந்து அடைந்தார். 217
ஆண்ட அரசு எழுந்தருள
ஆரூரில் அன்பர்கள் தாம்
நீண்ட சடை முடியார் பால்
நிறைந்த அருள் பெற்றுடையார்
காண் தகு மாளிகை மாடம்
கவின் சிறந்து ஓங்கிட எங்கும்
சேண் திகழ் வீதிகள் பொலியத்
திரு மலி மங்கலம் செய்தார். 218
வல் அமண் குண்டர் தம்
மாயை கடந்து மறி கடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர்
வந்தார் எனும் களிப்பால்
எல்லையில் தொண்டர் எயில்புறம்
சென்று எதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித்
தொழுது உரைசெய்து அணைவார். 219
பற்று ஒன்று இலாவரும் பாதகர்
ஆகும் அமணர் தம் பால்
உற்ற பிணி ஒழிந்து உய்யப்
போந்தேன் பெறல் ஆவது ஒன்றே
புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியம் என்று
அற்ற உணர்வொடும் ஆரூர்த்
திருவீதி உள் அணைந்தார். 220
சூழும் திருத்தொண்டர் தம்முடன்
தோரண வாயில் நண்ணி
வாழி திரு நெடும் தேவாசிரியன்
முன் வந்து இறைஞ்சி
ஆழி வரைத் திரு மாளிகை
வாயில் அவை புகுந்து
நீள் சுடர் மா மணிப் புற்று
உகந்தாரை நேர் கண்டு கொண்டார். 221
கண்டு தொழுது விழுந்து கர
சரண் ஆதி அங்கம்
கொண்ட புளகங்களாக எழுந்து
அன்பு கூரக் கண்கள்
தண்துளி மாரி பொழியத்
திரு மூலட்டானர் தம்மைப்
புண்டரிகக் கழல்
போற்றித் திருத்தாண்டகம் புனைந்து. 222
காண்டலே கருத்தாய் நினைந்து
என்னும் கலைப் பதிகம்
தூண்டா விளக்கு அன்ன சோதி
முன் நின்று துதித்து உருகி
ஈண்டு மணிக் கோயில் சூழ
வலம் செய்து இறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள்
திருவாயில் புறத்து அணைந்தார். 223
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின்முன் தேவ ஆசிரியன் சார்ந்து
கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரைக்
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய்கவர்ந்த கள்வனேன் என்று
எய்து அரிய கை யறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே. 224
மார் பாரப் பொழி கண்ணீர்
மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில்
சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின்
மாலைகளும் செம் பொன் தாளே
சார்வான திருமனமும் உழவாரத்
தனிப்படையும் தாமும் ஆகிப்
பார் வாழத் திரு வீதிப் பணி
செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார். 225
நீடு புகழ்த் திருவாரூர் நிலவு
மணிப்புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக்
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து
கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடு இளம் பூதத்தினான் எனும்
பதிகம் முதலான பலவும் பாடி
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம்
கரைந்து உருகி நயந்து செல்வார். 226
நான் மறைநூல் பெருமை நமி நந்தி
அடிகள் திருத்தொண்டின் நன்மை
பான்மை நிலையால் அவரைப் பரமர்
திருவிருத்தத்துள் வைத்துப் பாடி
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர்
அரன் நெறியில் திகழும் தன்மை
ஆன திறமும் போற்றி அணி வீதிப்
பணி செய்து அங்கு அமரும் நாளில். 227
நீர் ஆரும் சடை முடியார் நிலவு
திருவலி வலமும் நினைந்து சென்று
வார் ஆரும் முலை மங்கை உமை
பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக்
கார் ஆரும் கறைக் கண்டர் கீழ்
வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர் தனில்
மீண்டும் அணைந்தார் அன்றே. 228
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப்
பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள் முன்
சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
மூவுலகும் களி கூர வரும் பெருமை
முறைமை யெலாம் கண்டு போற்றி
நாவினுக்குத் தனி அரசர்
நயக்குநாள் நம்பர்திரு அருளினாலே. 229
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ
பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவி எழும்
காதல் புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது
அகன்று அங்கு உள்ளம் வைத்துப்
பொருப்பரையன் மடப் பாவை இடப்பாகர்பதி
பிறவும் பணிந்து போந்தார். 230
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி
அதன் கண் நின்றும்
பன்னாகப் பூண் அணிவார் பயின்ற
திருப்பதி பலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர்
வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி
மின் ஆரும் புரி முந்நூல்
முருகனார் திருமடத்தில் மேவும் காளை. 231
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி
ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும்
நீண்ட சுடர் மா மணியைக்
கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி
மீண்டு அருளினார் என்று கேட்டு
அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை
சூழ எழுந்து அருளி எதிரே சென்றார். 232
கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன்
எதிர் அணையும் காதல் கேட்டு
வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி
வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர்
குழாம் இருதிறமும் சேர்ந்த போதில்
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி
அணைந்த போல் இசைந்த அன்றே. 233
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச்
சிரபுரத்துத் தெய்வ வாய்மை
பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார்
எதிர்வணங்கி அப்பரே நீர்
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை
வகுத்து உரைப்பீர் என்று கூற
அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை
அவரும் எதிர் அருளிச் செய்தார். 234
சித்தம் நிலாவும் தென்
திரு ஆரூர் நகராளும்
மைத் தழை கண்டர் ஆதிரை
நாளின் மகிழ் செல்வம்
இத் தகைமைத்து என்று என்
மொழிகேன்? என்று அருள் செய்தார்
முத்து விதான மணிப் பொன்
கவரி மொழி மாலை. 235
அம்மொழி மாலைச் செந்தமிழ்
கேளா அணி சண்பை
மைம் மலர் கண்டத்து
அண்டர் பிரானார் மகனாரும்
கொய்ம் மலர் வாவித் தென்
திரு ஆரூர் கும்பிட்டே
உம்முடன் வந்து இங்கு உடன்
அமர்வேன் என்று உரை செய்தார். 236
மா மதில் ஆரூர் மன்னரை
அங்கு வணங்கச் செந்
தாமரை ஓடைச் சண்பையர்
நாதன் தான் ஏக
நாமரு சொல்லின் நாதரும்
ஆர்வத்தொடு புக்கார்
பூ மலர் வாசம் தண்
பணை சூழும் புகலூரில். 237
அத் திரு மூதூர்
மேவிய நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு
தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்து இழி தாரைக் கண்
பொழி நீர் மெய்ம் முழுதாரப்
பைத் தலை நாகப் பூண்
அணிவாரைப் பணி உற்றார். 238
தேவர் பிரானைத் தென்
புகலூர் மன்னிய தேனைப்
பா இயல் மாலைச்
செந்தமிழ் பாடிப் பரிவோடு
மேவிய காலம் தோறும்
விருப்பில் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி
செய்து அங்கு உறைகின்றார். 239
சீர் தரு செங்காட்டங்
குடி நீடும் திருநள்ளாறு
ஆர் தரு சோலை
சூழ்தரு சாந்தை அயவந்தி
வார் திகழ் மென் முலையான்
ஒரு பாகன் திருமருகல்
ஏர் தரும் அன்பால்
சென்று வணங்கி இன்புற்றார். 240
அப்படிச் சின்னாள் சென்ற பின்
ஆரூர் நகர் ஆளும்
துப்பு உறழ் வேணிக் கண்
நுதலாரைத் தொழுது இப்பால்
மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர்
வேணு புரத்து எங்கள்
பொன் புரி முந்நூல்
மார்பரும் வந்தார் புகலூரில். 241
பிள்ளையார் எழுந்து அருளப்
பெரு விருப்பால் வாகீசர்
உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு
அங்கு உடன்உறையும் நாளின்கண்
வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று
அவர் பால் எழுந்து அருள
எள் அரும் சீர் நீல
நக்கர் தாமும் எழுந்து அருளினார். 242
ஆங்கு அணையும் அவர்களுடன்
அப்பதியில் அந்தணராம்
ஓங்கு புகழ் முருகனார்
திரு மடத்தில் உடனாகப்
பாங்கில் வரும் சீர் அடியார்
பலரும் உடன் பயில் கேண்மை
நீங்கரிய திருத் தொண்டின்
நிலை உணர்ந்து நிகழ்கின்றார். 243
திருப் பதிகச் செழுந்தமிழின்
திறம் போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப்
பாகர் பொன் தாளில்
விருப்பு உடைய திருத் தொண்டர்
பெருமையினை விரித்து உரைத்து அங்கு
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன்
உறைவின் பயன் பெற்றார். 244
அந் நாளில் தமக்கு ஏற்ற
திருத் தொண்டின் நெறி ஆற்ற
மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும்
பதி எனைப் பலவும்
முன்னாகச் சென்று ஏத்தி
முதல்வன் தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணி மாடப் பூம்
புகலூர் தொழுது அகன்றார். 245
திரு நீல நக்க
அடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள் பிறரும்
விடை கொண்டு ஏக
ஒரு நீர்மை மனத்து
உடைய பிள்ளையாருடன் அரசும்
வரும் சீர் செஞ்சடைக் கரந்தார்
திரு அம்பர் வணங்கினார். 246
செங்குமுத மலர் வாவித்
திருக்கடவூர் அணைந்து அருளிப்
பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன்
அடிகள் தொழுது ஏத்திக்
குங்குலியக் கலயனார் திருமத்தில்
குறை அறுப்ப
அங்கு அவர்பால் சிவன்
அடியாருடன் அமுது செய்தார்கள். 247
சீர் மன்னும் திருக்
கடவூர்த் திருமயானமும் வணங்கி
ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல
பாடி இனிது அமர்ந்து
கார் மன்னும் கறைக் கண்டர்
கழல் இணைகள் தொழுது அகன்று
தேர் மன்னும் மணி வீதித்
திரு ஆக்கூர் சென்று அணைந்தார். 248
சார்ந்தார் தம் புகல் இடத்தைத்
தான் தோன்றி மாடத்துக்
கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து
கோதில் தமிழ்த்தொடை புனைந்து
வார்ந்து ஆடும் சடையார் தம்
பதி பலவும் வணங்கி உடன்
சேர்ந்தார்கள் தம் பெருமான்
திரு வீழி மிழலையினை. 249
வீழி மிழலை வந்து அணைய
மேவும் நாவுக்கு அரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும்
கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத
அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர் கொண்டு
வணங்க வணங்கி உள்புக்கார். 250
மாட வீதி அலங்கரித்து மறையோர்
வாயின் மணி விளக்கு
நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து
நிறை பொன் குடம் எடுத்துப்
பீடு பெருகும் வாகீசர்
பிள்ளையாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண் இழிந்த
கோயில் வாயில் சென்று அணைந்தார். 251
சென்று உள் புகுந்து திருவீழி
மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில்
வலமா வந்து திரு
முன்றில் வணங்கி முன் எய்தி
முக்கண் செக்கர் சடை மவுலி
வென்றி விடையார் சேவடிக் கீழ்
விழுந்தார் எழுந்தார் விம்மினார். 252
கைகள் குவித்துக் கழல் போற்றிக்
கலந்த அன்பு கரைந்து உருக
மெய்யில் வழியும் கண் அருவி
விரவப் பரவும் சொல் மாலை
செய்ய சடையார் தமைச் சேரார்
தீங்கு நெறி சேர்கின்றார் என்று
உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து
அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க. 253
முன்னாள் அயனும் திருமாலும்
முடிவும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ
நீர் மிழலையினில் போற்றிப்
பல் நாள் பிரியா நிலைமையினால்
பயிலக் கும்பிட்டு இருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில்
இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள். 254
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து
சில நாள் சென்று அதன் பின்
மாரி சுருங்கி வளம் பொன்னி
நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும்
பல மன் உயிர்கள் எல்லாம்
பாரின் மலிந்த இலம் பாட்டில்
படர் கூர் வறுமை பரந்ததால். 255
வையம் எங்கும் வற்கடம் ஆய்ச்
செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்
தமக்கும் நாவுக்கு அரசருக்கும்
கையில் மானும் மழுவும் உடன்
காணக் கனவில் எழுந்து அருளிச்
செய்ய சடையார் திருவீழி மிழலை
உடையார் அருள் செய்வார். 256
கால நிலைமையால் உங்கள் கருத்தில்
வாட்டம் உறீர் எனினும்
ஏல உம்மை வழி படுவார்க்கு
அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்து அருளிக்
குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
வைத்தார் மிழலை நாயகனார். 257
விண்ணின் நின்று இழிந்த விமானத்தின்
கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண் தகையார்
தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறும் காசு
படிவைத்து அருள நானிலத்தில்
எண்ணில் அடியார் உடன் அமுது
செய்து அங்கு இருந்தார் இருவர்களும். 258
அல்லார் கண்டத்து அண்டர் பிரான்
அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருகப்
பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு
பொழுதும் பறை நிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறு இட்டார்
துயர்கூர் வறுமை தொலைத்திட்டார். 259
ஈசர் மிழலை இறையவர் பால்
இமையப் பாவை திருமுலைப் பால்
தேசம் உய்ய உண்டவர் தாம்
திருமா மகனார் ஆதலினால்
காசு வாசியுடன் பெற்றார் கைத்
தொண்டு ஆகும் படிமையினால்
வாசி இல்லாக் காசு படி
பெற்று வந்தார் வாகீசர். 260
ஆறு சடை மேல் அணிந்து அருளும்
அண்ணல் வைத்த படிக் காசால்
ஈறு இலாத பொருள் உடைய
இருவர் உடைய திருமடங்கள்
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து
உண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவி போற்ற
இன்புற்று இருக்கும் அந் நாளில். 261
காலம் தவறு தீர்ந்து எங்கும்
கலிவான் பொழிந்த புனல் கலந்து
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி
உணவு பெருகி நலம் சிறப்ப
மூல அன்பர் இருவர்களும் மொழி
மாலைகளும் பல சாத்தி
நீல கண்டர் உறை பதிகள்
பிறவும் வணங்க நினைவுற்றார். 262
வாய்ந்த மிழலை மா மணியை
வணங்கிப் பிரியா விடை கொண்டு
பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப்
போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை
வண்தமிழ்கள் புனைந்து போய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு
எல்லை இல்லாச் சீர்த்தியினார். 263
மன்றல் விரவு மலர்ப் புன்னை
மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறும் சிறு மடவார்
முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில்
புகுந்து வலம் கொண்டு
சென்று சேர்ந்தார் தென் புகலிக்
கோவும் அரசும் திரு முன்பு. 264
பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு
நெருங்கும் அப் பதியில்
அரவச் சடை அந்தணனாரை அகில
மறைகள் அர்ச்சனை செய்து
உரவக் கதவம் திருக் காப்புச்
செய்த அந்நாள் முதல் இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி
நீள் வாயில் வணங்குவார். 265
தொல்லை வேதம் திருக் காப்புச்
செய்த வாயில் தொடர் அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு
ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள்
தொழுவார் ஆம்படி கண்டு
எல்லை இல்லாப் பெரும் புகழார்
இதனை அங்குக் கேட்டு அறிந்தார். 266
ஆங்கு அப் பரிசை அறிந்து
அருளி ஆழித்தோணி புரத்து அரசர்
ஓங்கு வேதம் அருச்சனை செய்
உம்பர் பிரானை உள் புக்குத்
தேம்கா திருவோம் நேர் இறைஞ்சத்
திருமுன் கதவம் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பர் என
நீடும் திருநாவுக்கு அரசர். 267
உண்ணீர்மையினால் பிள்ளையார் உரைசெய்து
அருள அதனாலே
பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப்
பாடப் பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத்
தாழ்க்கத் திருக் கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர்
என்று பாடி இறைஞ்சுதலும். 268
வேத வளத்தின் மெய்ப் பொருளின்
அருளால் விளங்கும் மணிக் கதவம்
காதல் அன்பர் முன்பு திருக்
காப்பு நீங்கக் கலை மொழிக்கு
நாதர் ஞான முனிவருடன்
தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்த
தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும். 269
அன்பர் ஈட்டம் களி சிறப்ப
ஆண்ட அரசும் சிவக் கன்றும்
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து
உள் புகுந்து தம் பெருமான்
முன்பு பணிந்து போற்றி இசைத்துப்
பரவி மொழி மாலைகள் பாடி
என்பு கரைய உள் உருகி
இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார். 270
புறம்பு நின்று வாகீசர் புனிதர்
அருளால் இக் கதவம்
திறந்தும் அடைத்தும் செல்லும்
நெறி திருந்தமலையாள் திருமுலையில்
கறந்த ஞானம் குழைத்த அமுது
செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும் வகை
நீரும் பாடி அருளும் என. 271
சண்பை ஆளும் தமிழ் விரகர்
தாமும் திரு நாவுக்கரசர்
பண்பின் மொழிந்த உரை கொண்டு
பதிகம் பாடும் அவ்வளவில்
கண் பொற்பமைந்த நுதல்
காளகண்டர் அருளால் கடிதுடனே
திண் பொன் கதவம் திருக் காப்புச்
செய்தது எடுத்த திருப் பாட்டில். 272
அது கண்டு உடைய பிள்ளையார்
தாமும்ஆண்ட அரசும் மகிழ்ந்து
இது நம் பெருமான் அருள் செய்யப்
பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித்
தொழுது பணிவு உற்றார்
எதிர் பொன் திருவாயிலின் வழக்கம்
என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல். 273
அங்கு நிகழ்ந்த அச்செயல் கண்டுஅடியார்
எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திட மெய்
பொழியும் கண்ணீர் பரந்து இழிய
எங்கும் நிகர் ஒன்று இல்லாத
இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெரும் தகையும்
அரசும் மடத்தில் நண்ணிய பின். 274
அரிதில் திறக்கத் தாம் பாட
அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது
அயர்ந்தேன் எனக் கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால்
அணைந்து பேழ் கணித்து
மருவும் உணர்வில் துயில் கொண்டார்
வாய்மை திறம்பா வாகீசர். 275
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின்
பாதம் மனத்தின் கண்
உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை
ஓர் பாகம் உடையவர் தாம்
பொன்னின் மேனி வெண் நீறு
புனைந்த கோலப் பொலிவினொடும்
துன்னி அவர்க்கு வாய் மூரில்
இருப்போம் தொடர வா என்றார். 276
போதம் நிகழ வா என்று போனார்
என் கொல் எனப் பாடி
ஈது எம்பெருமான் அருளாகில் யானும்
போவேன் என்று எழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து
போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும்
அவ் வேடத்தால் எழுந்து அருள. 277
சீரார் பதியின் நின்று எழுந்து
செல்லும் திருநாவுக்கு அரசர்
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண
எய்தா வாறே போல்
நீரார் சடையார் எழுந்து அருள
நெடிது பின்பு செல்லும் அவர்
பேராளரை முன் தொடர்ந்து அணையப்
பெறுவார் எய்தப் பெற்று இலரால். 278
அன்ன வண்ணம் எழுந்து அருளி
அணித்தே காட்சி கொடுப்பார் போல்
பொன்னின் கோயில் ஒன்று எதிரே
காட்டி அதனுள் புக்கு அருளத்
துன்னும் தொண்டர் அம் மருங்கு
விரைந்து தொடரப் போந்த படி
மன்னும் புகலி வள்ளலார் தாமும்
கேட்டு வந்து அணைந்தார். 279
அழைத்துக் கொடு போந்து அணியார் போல்
காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே
திறப்பித் தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு
உறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார் தாம்
இங்கு எப்பால் மறைவது என. 280
மாட நீடு திருப்புகலி மன்னர்
அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னங் காணாதார் நேரே
காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி
அரசும் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்று எடுத்துப்
பரமர் தம்மைப் பாடினார். 281
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு
பரமர் தாமும் எழுந்து அருள
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும்
கோயில் வலம் செய்து
சூடும் பிறையார் பெரும் தொண்டர்
தொழுது போற்றித் துதி செய்து
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து
அந் நகரில் உடன் உறைந்தார். 282
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே
அங்கண் இனிது அமர்ந்து
பூண்ட காதல் பொங்கி எழ
வாய் மூர் அடிகள் போற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி
ஞான முனிவர் ஒடு
மீண்டு வந்து திருமறைக் காடு
எய்தி விமலர் தாள் பணிந்தார். 283
ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு
ஆன பணி செய்து அமரும் நாள்
சீத மதி வெண் குடை
வளவர் மகளார் தென்னன் தேவியாம்
கோதில் குணத்துப் பாண்டி மா
தேவியார் முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர் வந்தார்
புகலி வேந்தர் தமைக் காண. 284
வந்து சிவனார் திருமறைக் காடு
எய்தி மன்னு வேணுபுரி
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்
பால் எய்தி அடி வணங்க
சிந்தை மகிழ்ந்து தீது இன்மை
வனவத் தீங்கும் உளவாமோ
இந்த உலகம் உய வந்தீர் இரு
தாள் நினைவார்க்கு என்று உரைப்பார். 285
சைவ நெறி வைதிகம் நிற்கச்
சழக்கு நெறியைத் தவம் என்னும்
பொய் வல் அமணர் செயல் தன்னைப்
பொறுக்க கில்லோம் எனக் கேட்டே
அவ் வன் தொழிலோர் செயல்
மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத்
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள்
சண்பைத் திரு மறையோர். 286
ஆய பொழுது திரு நாவுக்கரசு
புகலி ஆண் தகைக்குக்
காய மாசு பெருக்கி உழல்
கலதி அமணர் கடுவினை செய்
மாயை சாலம் மிக வல்லார் அவர்
மற்று என்னை முன் செய்த
தீய தொழிலும் பல கெட்டேன்
சொல்ல இசையேன் யான் என்றார். 287
என்று கூற எல்லை இலா
நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்து உடையேன்
அங்குத் தீங்கு புரி அமணர்
நின்ற நிலைமை அழிவித்துச் சைவ
நெறி பாரித்து அன்றி
ஒன்றும் செய்யேன் ஆணை உமது
என்றார் உடைய பிள்ளையார். 288
போமா துணிந்து நீர் அங்குப்
போகப் போதா அவ் அமணர்
தீ மாயையினை யானே போய்ச்
சிதைத்து வருகின்றேன் என்ன
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை
மறுக்க மாட்டது அரசு இருப்பத்
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில்
போனார் ஞானத் தலைவனார். 289
வேணு புரக்கோன் எழுந்து அருள
விடைகொண்டு இருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர்
தம்மைப் போற்றி இசைத்துப்
பேணி இருந்து அங்கு உறையும்
நாள் பெயர்வார் வீழிமிழலை அமர்
தாணுவின் தன் செய்ய கழல்
மீண்டும் சார நினைக்கின்றார். 290
சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும்
சோதி அருள் பெற்று அகன்று போய்
வேலை விடம் உண்டவர் வீழி
மிழலை மீண்டும் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம்
பிறவும் தாம் பணிந்து
சாலு மொழி வண் தமிழ்ப் பாடித்
தலைவர் மிழலை வந்து அடைந்தார். 291
வீழி மிழலை தனிப் பணிந்து
வேத முதல்வர் தாம் இருப்ப
ஆழி வலம் ஏந்திய அரியால்
ஆகாசத்தின் நின்று இழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில்
மன்னும் பொருளை போற்றிசைத்துத்
தாழும் நாளில் பிறபதியும் பணியும்
காதல் தலை நிற்பார். 292
பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை
போய்ப் பணிவார் பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடு தண்
துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
நாவுக் கரசர் ஞானப் போன
கர்க்குச் செம் பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றிப்
போந்து பிறவும் பணிகின்றார். 293
செய்ய சடையார் பழையாறை எய்த
அதனில் செல் பொழுதில்
மையல் அமணர் மறைத்த
வடதளியின் மன்னும் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுது அருளக்
கண்டவாற்றால் அமணர்கள் தம்
பொய் கொள் விமானம் எனக் கேட்டுப்
பொறாத உள்ளம் மிகப் புழுங்கி. 294
அந்த விமானம் தனக்கு அருகா
ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக்
கந்தம் மலரும் கடிக் கொன்றை
முடியார் செய்ய கழல் உன்னி
மந்த அமணர் வஞ்சனையால்
மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தம் கொண்ட குண்டர் திறம்
பாற்றும் என்று பணிந்து இருந்தார். 295
வண்ணம் கண்டு நான் உம்மை
வணங்கி அன்றிப் போகேன் என்று
எண்ண முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு
அரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ணமாக மன்னனுக்குக் கனவில்
அருளிச் செய்கின்றார். 296
அறிவில் அமணர் நமை மறைப்ப
இருந்தோம் என்று அங்கு அடையாளக்
குறிகள் அறியச் செய்து அருளி
நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப்
போக்கு என்று அருள் புரிய
செறிவில் அறிவுற்று எழுந்து அவனும்
செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி. 297
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக்
கூடக் கடிது எய்தி
அண்டர் பெருமான் அருள் செய்த
அடையாளத்தின் வழி கண்டு
குண்டர் செய்த வஞ்சணையைக் குறித்து
வேந்தன் குலவு பெரும்
தொண்டர் தம்மை அடி வணங்கித்
தொக்க அமணர் தூர் அறுத்தான். 298
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண்
ஆயிரமும் மாய்ந்தற் பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு
விமானம் ஆக்கி விளக்கியபின்
ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு
நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச
ஞான அரசும் புக்கு இறைஞ்சி
நாதர் முன்பு போற்றுவார். 299
தலையின் மயிரைப் பறித்து உண்ணூம்
சாதி அமணர் மறைத்தாலும்
நிலை இலாதார் நிலைமையினால்
மறைக்க ஒண்ணுமோ என்னும்
விலை இல் வாய்மைக்குறும் தொகைகள்
விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே
இலை கொள் சூலப் படையார் சேர்
இடங்கள் பிறவும் தொழ அணைவார். 300
பொங்கு புனலார் பொன்னியில்
இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித்
தமிழ் மாலைகளும் சாத்திப் போய்
எங்கும் நிறைந்த புகழ் ஆளர்
ஈறில் தொண்டர் எதிர் கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக் காவின்
மருங்கு சென்று அணைந்தார். 301
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச்
செஞ்சொல் மாலை பல பாடி
இலங்கு சடையார் எறும்பியூர்
மலையும் இறைஞ்சிப் பாடியபின்
மலர்ந்த சோதித் திருச்சிராப்பள்ளி
மலையும் கற்குடியும்
நலம்கொள் செல்வத் திருப்பராய்த்
துறையும் தொழுவான் நண்ணினார். 302
மற்றப் பதிகள் முதலான மருங்கு
உள்ளனவும் கை தொழுது
பொன் புற்று அமைந்த திருப்பணிகள்
செய்து பதிகம் கொடு போற்றி
உற்ற அருளால் காவிரியை ஏறி
ஒன்னார் புரம் எரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச்
சென்று சேர்கின்றார். 303
வழி போம் பொழுது மிக இளைத்து
வருத்தம் உற நீர் வேட்கையொடும்
அழிவாம் பசி வந்து அணைந்திடவும்
அதற்குச் சித்தம் அலையாதே
மொழி வேந்தரும் முன் எழுந்து
அருள முருகுஆர் சோலைப் பைஞ்ஞீலி
விழி ஏந்திய நெற்றியினார் தம்
தொண்டர் வருத்தம் மீட்பாராய். 304
காவும் குளமும் முன் சமைத்துக்
காட்டி வழி போம் கருத்தினால்
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும்
பொதி சோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே
நண்ணி இருந்தார் விண்ணின் மேல்
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி
ஏனமும் காண்பு அரியவர் தாம். 305
அங்கண் இருந்த மறையவர் பால்
ஆண்டஅரசும் எழுந்து அருள
வெங்கண் விடை வேதியர் நோக்கி
மிகவும் வழிவந்து இளைத்து இருந்தீர்
இங்கு என் பாலே பொதி சோறு
உண்டு இதனைஉண்டு தண்ணீர் இப்
பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப்
போக்கிப் போவீர் எனப் புகன்றார். 306
நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர்
அருள்என்று அறிந்தார் போல்
உண்ணும் என்று திருமறையோர்
உரைத்துப் பொதிசோறு அளித்தலுமே
எண்ண நினையாது எதிர் வாங்கி
இனிதாம் அமுது செய்து இனிய
தண்ணீர் அமுது செய்து அருளித்
தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார். 307
எய்ப்பு நீங்கி நின்றவரை
நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர் போவது
என்றார் அரசும் அவர்க்கு எதிரே
செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப்
போவது என்று உரைப்ப
ஒப்பு இலாரும் யான் அங்குப்
போகின்றேன் என்று உடன் போந்தார். 308
கூட வந்து மறையவனார்
திருப்பைஞ்ஞீலி குறுகியிட
வேடம் அவர் முன் மறைத்தலுமே
மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம்
ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய்
அளித்த கருணை எனப்
பாடல் புரிந்து விழுந்து எழுந்து
கண்ணீர் மாரிபயில் வித்தார் . 309
பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும்
பரமர் கோயில் சென்று எய்தி
மைஞ் ஞீலத்து மணி கண்டர்
தம்மை வணங்கி மகிழ் சிறந்து
மெய்ஞ் ஞீர்மையினில் அன்புருக
விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக்
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு
செய்து காதலுடன் இருந்தார். 310
நாதர் மருவும் திருமலைகள் நாடும்
பதிகள் பல மிகவும்
காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த
இசை வண் தமிழ் பாடி
மாதோர் பாகர் அருளாலே
வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்த
திரு அண்ணாமலையை நண்ணினார். 311
செங்கண் விடையார் திரு அண்ணா
மலையைத் தொழுது வலம் கொண்டு
துங்க வரையின் மிசை ஏறி
தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும்
அங்கண் அரசைத் தொழுது
எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு
மேலாம் பெருமை சாதித்தார். 312
அண்ணாமலை மலை மேல் அணிமலையை
ஆரா அன்பின் அடியவர் தம்
கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக்
கடலில் வந்து எழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு
உருகும் சிந்தை உடன்
பண்ணார் பதிகத் தமிழ் பாடிப்
பணிந்து பரவிப் பணி செய்தார். 313
பணியார் வேணிச் சிவ பெருமான்
பாதம்போற்றிப் பணி செயும் நாள்
மணியார் கண்டத்து எம் பெருமான்
மண் மேல்மகிழும் இடம் எங்கும்
தணியாக் காதலுடன் சென்று வணங்கித்
தக்க பணி செய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டில்
அருளால் அணைவார் ஆயினார். 314
காதல் செய்யும் கருத்தின் உடன்
காடும் மலையும் கான் ஆறும்
சூதமலி தண் பணைப் பதிகன்
பலவும் கடந்து சொல்லினுக்கு
நாதர் போந்து பெரும் தொண்டை
நன்னாடு எய்தி முன் ஆகச்
சீத மலர் மென் சோலை சூழ்
திரு ஓத்தூரில் சென்று அடைந்தார். 315
செக்கர் சடையார் திரு ஓத்தூர்த்
தேவர் பிரானார் தம் கோயில்
புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப்
போற்றிக் கண்கள் புனல் பொழிய
முக் கண் பிரானை விரும்பும்
மொழித்திருத் தாண்டகங்கள் முதலாகத்
தக்க மொழி மாலைகள் சாத்திச்
சார்ந்து பணி செய்து ஒழுகுவார். 316
செய்ய ஐயர் திரு ஓத்தூர்
ஏத்திப் போந்து செழும் புவனம்
உய்ய நஞ்சு உண்டு அருளும்
அவர் உறையும் பதிகள்பல வணங்கித்
தையல் தழுவக் குழைந்த பிரான்
தங்கும் தெய்வப்பதி என்று
வையம் முழுதும் தொழுது ஏத்தும்
மதில் சூழ்காஞ்சி மருங்கு அணைந்தார். 317
ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர்
தம் பேர் அருளினால்
சூலை மடுத்து முன் ஆண்ட
தொண்டர் வரப்பெற்றோம் என்று
காலை மலரும் கமலம் போல்
காஞ்சி வாணர் முகம் எல்லாம்
சால மலர்ந்து களி சிறப்பத்
தழைத்த மனங்கள் தாங்குவார். 318
மாட வீதி மருங்கு எல்லாம்
மணி வாயில்களில் தோரணங்கள்
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து
நிறை பொற்குடம் தீபம்
தோடு குலவு மலர் மாலை
சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியும் உடன் எடுத்து
அங்கு அணிநீள் காஞ்சி அலங்கரித்தார். 319
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து
சொல்லுக்கு அரசர் பால்
கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும்
வீதி பணி செய்யும்
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு
முதல் ஆம் அவை ஏந்தி
இண்டை புனைந்த சடை முடியார்க்கு
அன்பர் தம்மை எதிர் கொண்டார். 320
எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்
தம்மை இறைஞ்சி எழுந்து அருளி
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர்
மறுகு உள் போந்து வானநதி
குதி கொண்டு இழிந்த சடைக்
கம்பர் செம்பொன் கோயில் குறுகினார்
அதிர் கொண்டு அலை நேர்
மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர். 321
திரு வாயிலினைப் பணிந்து எழுந்து
செல்வத் திரு முன்றிலை அணைந்து
கருவார் கச்சி ஏகம்பர் கனக
மணி மாளிகை சூழ்ந்து
வருவார் செம் பொன் மலை வல்லி
தழுவக் குழைந்த மணி மேனிப்
பெரு வாழ்வினை முன் கண்டு
இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார். 322
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க்
கால் தோறும் வரும் புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப
அன்பு கரைந்து புள் அலைப்பச்
சேர்ந்த நயனப் பயன் பெற்றுத்
திளைப்பத் திருவேகம்பர் தமை
நேர்ந்த மனத்தில் உற வைத்து
நீடும் பதிகம் பாடுவார். 323
கரவாடும் வன் நெஞ்சர்க்கு
அரியானை என்று எடுத்துப்
பரவாய சொல் மாலைத் திருப்
பதிகம் பாடிய பின்
விரிவார் தம் புரம் எரித்த
விடையவனார் வெள் எயிற்றின்
அரவு ஆரம் புனைந்தவர் தம்
திருமுன்றில் புறத்து அணைந்தார். 324
கையார்ந்த திருத்தொண்டு கழிய
மிகும் காதலோடும்
செய்யா நின்றே எல்லாச்
செந்தமிழ் மாலையும் பாடி
மையார்ந்த மிடற்றர் திரு
மயானத்தை வலம் கொண்டு
மெய்யார்வம் உறத் தொழுது
விருப்பினோடு மேவு நாள். 325
சீர் வளரும் மதில் கச்சி நகர்த்
திரு மேல் தளி முதலாம்
நீர் வளரும் சடையவர் தாம்
நிலவி உறை ஆலயங்கள்
ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி
ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால்
சார்வுறு மாலைகள் சாத்தித்
தகும் தொண்டு செய்திருந்தார். 326
அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து
உறையும் நாளின் கண்
மன்னு திரு மாற் பேறு
வந்து அணைந்து தமிழ் பாடிச்
சென்னி மிசை மதி புனைவார்
பதி பலவும் சென்று இறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த
பெரும் காதலினால். 327
ஏகம்பன் காண் அவன் என்
எண்ணத்தான் எனப் போற்றிப்
பாகம் பெண் உருவானைப் பைங்
கண் விடை உயர்த்தானை
நாகம் பூண் உகந்தானை நலம்
பெருகும் திரு நீற்றின்
ஆகந்தோய் அணியானை அணைந்து
பணிந்து இன்புற்றார் . 328
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து
ஏத்தித் திங்களார்
நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு
பதி தொழ நினைவார்
வருக்கைச் செஞ்சுளை பொழி தேன்
வயல்விளைக்கும் நாட்டு இடை போய்ப்
பருக்கைத் திண் களிற்று உரியார்
கழுக் குன்றின் பாங்கு அணைந்தார். 329
நீடு திருக் கழுக் குன்றில்
நிருத்தனார் கழல் வணங்கிப்
பாடு தமிழ்த் தொடை புனைந்து
பாங்கு பல பதிகளிலும்
சூடும் இளம் பிறை முடியார்
தமைத் தொழுது போற்றிப் போய்
மாடு பெரும் கடல் உடுத்த
வான்மியூர் மருங்கு அணைந்தார். 330
திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து
பணிந்த அன்பினொடும்
பெரு வாய்மைத் தமிழ்பாடி
அம் மருங்கு பிறப்பு அறுத்துத்
தருவார் தம் கோயில் பல சார்ந்து
இறைஞ்சித் தமிழ் வேந்தர்
மருவாரும் மலர்ச் சோலை
மயிலாப்பூர் வந்து அடைந்தார். 331
வரை வளர் மா மயில்
என்ன மாடமிசை மஞ்சாடும்
தரை வளர் சீர்த் திருமயிலைச்
சங்கரனார் தாள் வணங்கி
உரை வளர் மாலைகள்
அணிவித்து உழவாரப் படை ஆளி
திரை வளர் வேலைக் கரை
போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார். 332
ஒற்றியூர் வள நகரத்து ஒளி
மணி வீதிகள் விளக்கி
நற்கொடி மாலைகள் பூகம் நறும்
கதலி நிரை நாட்டிப்
பொற்குடங்கள் தூபங்கள்
தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர் கொண்டு கொடு
புக்கார் வழித் தொண்டர். 333
திரு நாவுக் கரசரும் அத்
திரு ஒற்றியூர் அமர்ந்த
பெரு நாகத்தின் சிலையார்
கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு
ஒரு ஞானத் தொண்டர் உடன்
உருகி வலம் கொண்டு அடியார்
கரு நாமம் தவிர்ப்பாரைக்
கை தொழுது முன் வீழ்ந்தார். 334
எழுதாத மறை அளித்த
எழுத்து அறியும் பெருமானைத்
தொழுத ஆர்வம் உற நிலத்தில்
தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம்
முழுது ஆய பரவசத்தின்
முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண் பொழிய
விதிர்ப்பு உற்று விம்மினார். 335
வண்டு ஓங்கும் செங் கமலம்
என எடுத்து மனம் உருகப்
பண் தோய்ந்த சொல்
திருத் தாண்டகம் பாடிப் பரவுவார்
விண் தோய்ந்த புனல் கங்கை
வேணியார் திரு உருவம்
கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை
தொழுது புறத்து அணைந்தார். 336
விளங்கு பெருந் திருமுன்றில்
மேவும் திருப்பணி செய்தே
உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு
திருக் குறுந் தொகைகள்
களங்கொள் திரு நேரிசைகள் பல
பாடிக் கை தொழுது
வளங்கொள் திருப் பதியதனில்
பல நாள்கள் வைகினார். 337
அங்குறையும் நாளின்கண்
அருகுளவாம் சிவாலயங்கள்
எங்கும் சென்று இனிது இறைஞ்சி
ஏத்தும் அவர் இறை அருளால்
பொங்கு புனல் திரு ஒற்றியூர்
தொழுது போந்து உமையாள்
பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம்
பதி அணைந்தார். 338
திருப்பாசூர் நகர் எய்திச்
சிந்தையினில் வந்து ஊறும்
விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய்
இடம் கொண்டு உலகு உய்ய
இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து
அருள எடுத்த தனிப்
பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது
எழுந்து போற்றுவார். 339
முந்தி மூவெயில் எய்த
முதல்வனார் என எடுத்துச்
சிந்தை கரைந்து உருகு திருக்
குறுந் தொகையும் தாண்டகமும்
சந்தம் நிறை நேர் இசையும்
முதலான தமிழ் பாடி
எந்தையார் திரு அருள்
பெற்று ஏகுவார் வாகீசர். 340
அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று
அயல் உளவாம் பதி அனைத்தின்
மைம் மலரும் களத்தாரை
வணங்கி மகிழ்வொடும் போற்றி
மெய்ம்மை நிலை வழுவாத
வேளாள விழுக் குடிமைச்
செம்மையினால் பழையனூர்த்
திரு ஆல வனம் பணிந்தார். 341
திரு ஆலங்காடு உறையும்
செல்வர்தாம் எனச் சிறப்பின்
ஒருவாத பெரும் திருத் தாண்டகம்
முதலாம் ஓங்கு தமிழ்ப்
பெரு வாய்மைத் தொடை மாலை
பல பாடிப் பிற பதியும்
மருஆர்வம் பெற வணங்கி வடதிசை
மேல் வழிக் கொள்வார். 342
பல் பதியும் நெடும் கிரியும்
படர் வனமும் சென்று அடைவார்
செல் கதி முன் அளிப்பார்
தம் திருக்காரிக் கரை பணிந்து
தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள்
பின் உம்பர் குழாம்
மல்கு திருக் காளத்தி
மா மலை வந்து எய்தினார். 343
பொன் முகலித் திருநதியின்
புனித நெடும் தீர்த்தத்தில்
முன் முழுகிக் காளத்தி
மொய் வரையின் தாழ்வரையில்
சென்னி உறப் பணிந்து எழுந்து
செம் கண் விடைத் தனிப்பாகர்
மன்னும் மலை மிசை ஏறி
வலம் கொண்டு வணங்குவார். 344
காதணி வெண் குழையானைக்
காளத்தி மலைக் கொழுந்தை
வேத மொழி மூலத்தை விழுந்து
இறைஞ்சி எழுந்து பெரும்
காதல் புரி மனம் களிப்பக்
கண் களிப்பப் பரவசமாய்
நாதனை என்கண்ணுளான் என்னும்
திருத்தாண்டகம் நவின்றார். 345
மலைச் சிகரச் சிகா மணியின்
மருங்கு உற முன்னே நிற்கும்
சிலைத் தடக்கைக் கண்ணப்பர்
திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி
அலைத்து விழும் கண் அருவி
ஆகத்துப் பாய்ந்து இழியத்
தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து
புறம் போந்து அணைந்தார். 346
சேண் நிலவு திருமலையில்
திருப்பணி ஆயின செய்து
தாணுவினை அம்மலை மேல்
தாள் பணிந்த குறிப்பினால்
பேணிதிருக் கயிலை மலை வீற்று
இருந்த பெருங் கோலம்
காணுமது காதலித்தார் கலை
வாய்மைக் காவலனார். 347
அங்கண் மா மலைமேல் மருந்தை
வணங்கியார் அருளால் மிகப்
பொங்கு காதலின் உத்தரத் திசை
மேல் விருப்போடு போதுவார்
துங்க மால் வரை கானியாறு
தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால் விடை அண்ணல்
மேவும் திருப் பருப்பதம் எய்தினார். 348
மான விஞ்சையர் வான நாடர்கள்
வான் இயக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்னகாதிபர்
காம சாரிகளே முதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை
வந்து இறைஞ்சி நலம் பெறும்
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி
வண் தமிழ் சாற்றினார். 349
அம் மருங்கு கடந்து போம் அவர்
ஆர் கொள் சூல அயில் படைச்
செம்மல் வெண் கயிலைப் பொருப்பை
நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்
எம் மருங்கும் ஓர் காதல் இன்றி
இரண்டு பாலும் வியந்து உளோர்
கைம் மருங்கு அணையும் தெலுங்கு
கடந்து கன்னடம் எய்தினார். 350
கரு நடம் கழிவாக ஏகிய
பின் கலந்த வனங்களும்
திரு நதித் துறை யாவையும் பயில்
சேண் நெடும் கிரி வட்டையும்
பெரு நலம் கிளர் நாடும்
எண்ணில பின்படச் செறி பொற்பினால்
வரு நெடும் கதிர் கோலு
சோலைய மாளவத்தினை நண்ணினார். 351
அங்கு முற்றி அகன்று போகி
அரும் சுரங்கள் கடந்து சென்று
எங்கும் மிக்க அறங்கள் நீடும்
இலாட பூமி இகந்து போய்
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள்
ஆறு கடந்து அயல்
பங்கயப் பழனத்து மத்திய
பை திரத்தினை எய்தினார். 352
அன்ன நாடு கடந்து கங்கை
அணைந்து சென்று வலம் கொளும்
மின்னு வேணியர் வாரணாசி
விருப்பினோடு பணிந்து உடன்
பின் அணைந்தவர் தம்மை அங்கண்
ஒழிந்து கங்கை கடந்து போய்
மன்னு காதல் செய் நாவின்
மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார். 353
மாகம் மீது வளர்ந்த கானகம்
ஆகி எங்கும் மனித்தரால்
போகலா நெறி அன்றியும்
புரிகின்ற காதல் பொலிந்து எழச்
சாக மூல பலங்கள் துய்ப்பனவும்
தவிர்ந்து தனித்து நேர்
ஏகினார் இரவும் பெரும்
கயிலைக் குலக்கிரி எய்துவார். 354
ஆயவார் இருளின் கண் ஏகும்
அவ்அன்பர் தம்மை அணைந்து முன்
தீயவாய விலங்கு வன் தொழில்
செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாக மணிப் பணங்
கொள் விளக்கு எடுத்தன வந்து கால்
தோய வானவராயினும் தனி
துன் அருஞ்சுரம் முன்னினார். 355
வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடைவெய்யவன்
கதிர் கை பரந்து
எங்கும் மிக்க பிளப்பில் நாகர்
தம் எல்லை புக்கு எரிகின்றன
பொங்கழற்று எறு பாலை வெந்நிழல்
புக்க சூழல் புகும் பகல்
செங்கதிர்க் கனல் போலும் அத்திசை
திண்மை மெய்த்தவர் நண்ணினார். 356
இங்ஙனம் இரவும் பகற் பொழுதும்
அரும் சுரம் எய்துவார்
பங்கயம் புரை தாள் பரட்டளவும்
பசைத் தசை தேயவும்
மங்கை பங்கர் தம் வெள்ளிமால்
வரை வைத்த சிந்தை மறப்பரோ
தம் கரங்கள் இரண்டுமே கொடு
தாவி ஏகுதல் மேவினார். 357
கைகளும் மணி பந்து
அசைந்துறவே கரைந்து சிதைந்தபின்
மெய் கலந்து எழு சிந்தை
அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட
மொய் கடுங் கனல் வெம்பரல்
புகை மூளும் அத்த முயங்கியே
மை கொள் கண்டர் தம் அன்பர்
செல்ல வருந்தி உந்தினர் மார்பினால். 358
மார்பமும் தசை நைந்து சிந்தி
வரிந்த என்பு முரிந்திட
நேர் வரும் குறி நின்ற சிந்தையின்
நேசம் ஈசனை நேடு நீடு
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும்
உடம்பு அடங்கம் ஊன் கெடச்
சேர் வரும் பழுவம் புரண்டு
புரண்டு சென்றனர் செம்மையோர். 359
அப்புறம் புரள்கின்ற நீள் இடை
அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி
சிந்தை சென்று உறும் ஆதலால்
மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த
பின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புறச் செயல் இன்றி அந்நெறி
தங்கினார் தமிழ் ஆளியார். 360
அன்ன தன்மையர் கயிலையை
அணைவதற்கு அருளார்
மன்னும் தீந்தமிழ் புவியின்
மேல் பின்னையும் வழுத்த
நன்னெடும் புனல் தடமும் ஒன்று
உடன் கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமர்
ஓர் முனிவராம் படியால். 361
வந்து மற்றவர் மருங்குற
அணைந்து நேர் நின்று
நொந்து நோக்கி மற்றவர்
எதிர் நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ் உறுப்பு
அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத்து எய்தியது
என் என இசைத்தார். 362
மாசில் வற்கலை ஆடையும்
மார்பின் முந்நூலும்
தேசுடைச் சடை மவுலியும்
நீறும் மெய் திகழ
ஆசில் மெய்த்தவர் ஆகி
நின்றவர் தமை நோக்கிப்
பேச உற்றதோர் உணர்வு
உற விளம்புவார் பெரியோர். 363
வண்டுலாங் குழல் மலை
மகளுடன் வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும் அப்
பரிசு அவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடும்
காதலின் அடைந்தேன்
கொண்ட என் குறிப்பு இது
முனியே எனக் கூற. 364
கயிலை மால் வரை
யாவது காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர்
அடைவதற்கு எளிதோ
அயில் கொள் வேல் படை
அமரரும் அணுகுதற்கு அரிதால்
வெயில் கொள் வெஞ்சுரத்து என்
செய்தீர் வந்து என விளம்பி. 365
மீளும் அத்தனை உமக்கு இனிக்
கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளும்
முந்நூல் முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில்
இருக்கை கண்டு அல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு
மீளேன் என மறுத்தார். 366
ஆங்கு மற்றவர் துணிவு
அறிந்தவர் தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பு இடைக்
கரந்து நீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கு அரசனே
எழுந்திர் என்று உரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு
எழுந்து ஒளி திகழ்வார். 367
அண்ணலே எனை ஆண்டு
கொண்டு அருளிய அமுதே
விண்ணிலே மறைந்து அருள்
புரி வேத நாயகனே
கண்ணினால் திருக் கயிலையில்
இருந்த நின் கோலம்
நண்ணி நான் தொழ நயந்து
அருள் புரி எனப் பணிந்தார். 368
தொழுது எழுந்த நல் தொண்டரை
நோக்கி விண் தலத்தில்
எழு பெரும் திருவாக்கினால்
இறைவர் இப் பொய்கை
முழுகி நம்மை நீ கயிலையில்
இருந்த அம் முறைமை
பழுதில் சீர்த் திருவையாற்றில்
காண் எனப் பணித்தார். 369
ஏற்றினார் அருள் தலை மிசைக்
கொண்டு எழுந்து இறைஞ்சி
வேற்றும் ஆகி விண் ஆகி
நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார்
அஞ்சு எழுத்து ஓதிப்
பால் தடம் புனல்
பொய்கையில் மூழ்கினார் பணியால். 370
ஆதி தேவர் தம் திரு அருள்
பெருமை யார் அறிந்தார்
போத மாதவர் பனிமலர்ப்
பொய்கையில் மூழ்கி
மாதோர் பாகனார் மகிழும்
ஐ ஆற்றில் ஓர் வாவி
மீது தோன்றி வந்து
எழுந்தனர் உலகெலாம் வியப்ப. 371
வம்புலாம் மலர் வாவியின்
கரையில் வந்து ஏறி
உம்பர் நாயகர் திரு அருள்
பெருமையை உணர்வார்
எம் பிரான் தரும் கருணை கொல்
இது என இரு கண்
பம்பு தாரை நீர் வாவியில்
படிந்து எழும் படியார். 372
மிடையும் நீள் கொடி
வீதிகள் விளங்கிய ஐயாறு
உடைய நாயகர் சேவடி
பணிய வந்து உறுவார்
அடைய அப்பதி நிற்பவும்
சரிப்பவும் ஆன
புடை அமர்ந்த தம்
துணையொடும் பொலிவன கண்டார். 373
பொன் மலைக் கொடியுடன்
அமர்வெள்ளியம் பொருப்பில்
தன்மை ஆம் படி
சத்தியும் சிவமுமாம் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும்
பயில்வன பணிந்தே
மன்னும் மாதவர் தம்பிரான்
கோயில் முன் வந்தார். 374
காணும் அப்பெருங் கோயிலும்
கயிலை மால் வரையாய்ப்
பேணும் மால் அயன்
இந்திரன் முதல் பெருந்தேவர்
பூணும் அன்போடு போற்றி இசைத்து
எழும் ஒலி பொங்கத்
தாணு மா மறை யாவையும்
தனித் தனி முழங்க. 375
தேவர் தானவர் சித்தர்
விச் சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள்
புடையெலாம் மிடையக்
காவி வாள் விழி
அரம்பையர் கானமும் முழவும்
தாவில் ஏழ் கடல்
முழக்கினும் பெருகொலி தழைப்ப. 376
கங்கையே முதல் தீர்த்தமாம்
கடவுள் மா நதிகள்
மங்கலம் பொலி புனல் பெரும்
தடம் கொடு வணங்க
எங்கும் நீடிய பெரும்
கண நாதர்கள் இறைஞ்சப்
பொங்கியங்களால் பூத
வேதாளங்கள் போற்ற. 377
அந்தண் வெள்ளி மால் வரை
இரண்டாம் என அணைந்து ஓர்
சிந்தை செய்திடச் செங்கண் மால்
விடை எதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன்
பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடு விடை
ஆடி முன் நணுக. 378
வெள்ளி வெற்பின் மேல் மரகதக்
கொடி உடன் விளங்கும்
தெள்ளு பேர் ஒளிப் பவள
வெற்பு என இடப்பாகம்
கொள்ளும் மா மலையாள் உடன்
கூட வீற்று இருந்த
வள்ளலாரை முன் கண்டனர்
வாக்கின் மன்னவனார். 379
கண்ட ஆனந்தக் கடவினைக்
கண்களால் முகந்து
கொண்டு கை குவித்து எதிர்
விழுந்து எழுந்து மெய் குலைய
அண்டர் முன்பு நின்று
ஆடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன
யார் சொல வல்லார். 380
முன்பு கண்டு கொண்டு அருளினார்
அமுது உண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவு இலா
ஆர்வம் முன் பொங்கப்
பொன் பிறங்கிய சடையாரைப்
போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார்
எல்லையில் தவத்தோர். 381
ஆயவாறு மற்று அவர்
மனம் களிப்புறக் கயிலை
மேய நாதர் தம் துணையொடும்
வீற்று இருந்து அருளித்
தூய தொண்டரும் தொழுது எதிர்
நிற்க அக் கோலம்
சேயது ஆக்கினார் திருவையாறு
அமர்ந்தமை திகழ. 382
ஐயர் கோலம் அங்கு அளித்து
அகன்றிட அடித் தொண்டர்
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட
வருந்தி மற்று இங்குச்
செய்ய வேணியர் அருள்
இதுவோ எனத் தெளிந்து
வையம் உய்ந்திட கண்டமை
பாடுவார் மகிழ்ந்து. 383
மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண் தமிழ்ச்
சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
வேத முதல்வர் ஐயாற்றில்
விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணை ஒடும் கூடக்
கண்டேன் எனப் பாடி நின்றார். 384
கண்டு தொழுது வணங்கிக்
கண் நுதலார் தமைப் போற்றிக்
கொண்ட திருத் தாண்டகங்கள்
குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி
வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான் திருவையாறு
அமர்ந்தனர் நாவுக்கு அரசர். 385
நீடிய அப்பதி நின்று
நெய்த்தானமே முதலாக
மாடுயர் தானம் பணிந்து
மழபாடியாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து
பணி செய்து போற்றித்
தேடிய மாலுக்கு அரியார்
திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார். 386
சேர்ந்து விருப்பொடும் புக்குத்
திரு நட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலம் கொண்டு
இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து
ஒழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க
அயர் உறும் தன்மையர் ஆனார். 387
திருப்பூந் துருத்தி அமர்ந்த
செஞ்சடையானை ஆன் ஏற்றுப்
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப்
பொய்யிலியைக் கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய
காதல் விளைப்ப
இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும்
குறுந் தொகை பாடி. 388
அங்கு உறையும் தன்மை வேண்டி
நாம் அடி போற்றுவது என்று
பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம்
போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத் தொண்டு செய்வார்
தம்பிரானார் அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும்
திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார். 389
பல் வகைத் தாண்டகத் தோடும்
பரவும் தனித் தாண்டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்து
அடைவும் திருத் தாண்டகமும்
செல் கதி காட்டிடப் போற்றும்
திரு அங்க மாலையும் உள்ளிட்டு
எல்லையில் பன்மைத் தொகையும்
இயம்பினர் ஏத்தி இருந்தார். 390
பொன்னி வலம் கொண்ட
திருப் பூந்துருத்தி அவர் இருப்பக்
கல் மனத்து வல் அமணர்
தமை வாதில் கட்டு அழித்துத்
தென்னவன் கூன் நிமிர்த்தி
அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு
மன்னிய சீர் சண்பை நகர்
மறையவனார் வருகின்றார். 391
தீம் தமிழ் நாட்டு இடை நின்றும்
எழுந்து அருளிச் செழும் பொன்னி
வாய்ந்த வளம் தரு நாட்டு
வந்து அணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர்
பால் செல்வன் எனப்
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு
அணையில் வந்து அணைந்தார். 392
சண்பை வருந் தமிழ்
விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு
மண் பரவும் பெருங் கீர்த்தி
வாகீசர் மனம் மகிழ்ந்து
கண் பெருகுங் களிகொள்ளக்
கண்டு இறைஞ்சும் காதலினால்
எண் பெருகும் விருப்பு எய்த
எழுந்து அருளி எதிர் சென்றார். 393
காழியர் கோன் வரும் எல்லை
கலந்து எய்திக் காதலித்தார்
சூழும் இடைந்திடு நெருக்கில்
காணாமே தொழுது அருளி
வாழி அவர் தமைத்
தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும் உடல் இது கொண்டு
தாங்குவன் யான் எனத் தரித்தார். 394
வந்து ஒருவர் அறியாமே
மறைந்த வடிவொடும் புகலி
அந்தணனார் ஏறி எழுந்து அருளி
வரும் மணி முத்தின்
சந்த மணிச் சிவிகையினைத்
தாங்குவார் உடன் தாங்கிச்
சிந்தை களிப்புற வருவார்
தமையாரும் தெளிந்து இலரால். 395
திரு ஞான மாமுனிவர் அரசு
இருந்த பூந் துருத்திக்கு
அருகுகாக எழுந்து அருளி எங்கு
உற்றார் அப்பர் என
உருகா நின்று உம் அடியேன்
உம் அடிகள் தாங்கி வரும்
பெரு வாழ்வு வந்து எய்தப்
பெற்று இங்கு உற்றேன் என்றார். 396
பிள்ளையார் அதுகேளாப் பெருகு
விரைவு உடன் இழிந்தே
உள்ளமிகு பதைப்பு எய்தி
உடைய அரசினை வணங்க
வள்ளலார் வாகீசர் அவர்
வணங்கா முன் வணங்கத்
துள்ளு மான் மறிக் கரத்தார்
தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார். 397
கழு மலக் கோன் திருநாவுக்கு
அரசருடன் கலந்து அருளிச்
செழு மதியம் தவழ்
சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான் ஏந்தும்
திருக்கரத்தார் மலர்த் தாள்கள்
தொழுது உருகி இன்புற்றுத் துதி
செய்து அங்கு உடன் இருந்தார். 398
வல் அமணர் தமை வாதில்
வென்றதுவும் வழுதி பால்
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண்
பொருந்தப் புனல் நாட்டில்
எல்லை இலாத் திரு நீறு
வளர்த்து அதுவும் இருந் தவத்தோர்
சொல்ல அது கேட்டு உவந்தார்
தூய புகழ் வாகீசர். 399
பண்புடைய பாண்டி மா
தேவியார் தம் பரிவும்
நண்புடைய குலச் சிறையார்
பெருமையும் ஞானத் தலைவர்
எண் பெருக உரைத்து அருள
எல்லையில் சீர் வாகீசர்
மண் குலவு தமிழ் நாடு
காண்பதற்கு மனம் கொண்டார். 400
பிரம புரத் திரு முனிவர்
பெரும் தொண்டை நல் நாட்டில்
அரன் உறையும் தானங்கள்
அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு
உரன் உடைய திரு நாவுக்கு
அரசர் உரை செய்து அருளப்
புரம் எரித்தார் திருமகனார்
பூந்துருத்தி தொழுது அகன்றார். 401
ஆண்ட அரசு அங்கணர் சீர்
அருள் பெற்றப் பதி நின்றும்
பாண்டி நாட்டு எழுந்து அருளும்
பான்மையராய்த் தென் திசை போய்க்
காண் தகைய திருப் புத்தூர்
பணிந்து ஏத்திக் கதிர் மதியம்
தீண்டு கொடி மதில் மதுரைத்
திரு ஆலவாய் சேர்ந்தார். 402
சென்று அணைந்து மதுரையினில்
திருந்திய நூல் சங்கத்துள்
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து
அருளிய அங்கணர் கோயில்
முன்றிலினை வலம் கொண்டு
முன் இறைஞ்சி உள் புக்கு
வன் தனி மால் விடையாரை
வணங்கி மகிழ்வொடும் திளைத்தார். 403
எய்திய பேர் ஆனந்த
இன்பத்தின் இடை அழுந்தி
மொய் திகழும் சடையானை
முளைத்தானை என்று எடுத்துச்
செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ்
பாடிப் புறத்து அணைவார்
கை தொழுது பணிந்து ஏத்தித்
திரு உள்ளம் களி சிறந்தார். 404
சீர் திகழும் பாண்டிமா
தேவியார் திரு நீற்றின்
சார்வு அடைய கூன் நிமிர்ந்த
தென்னவனார் தம் உடனே
பார் பரவும் குலச் சிறையார்
வாகீசர் தமைப் பணி உற்று
ஆரகிலாக் காதல் மிக
அடி போற்ற அங்கு இருந்தார். 405
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச்
செழும் பொருள் நூல்
தருவானை நேர் இசையும்
தாண்டகமும் முதலான
பெரு வாய்மைத் தமிழ் பாடிப்
பேணு திருப்பணி செய்து
மருவார் தம் புரம் எரித்தார்
பூவணத்தை வந்து அடைந்தார். 406
கொடி மாடம் நிலவு திருப்
பூவணத்துக் கோயிலின் உள்
நெடியானுக்கு அறிவு அரியார் நேர்
தோன்ற கண்டு இறைஞ்சி
வடிவேலு திரிசூலத்
தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடி நீடு திருமேனிப்
புனிதர் பதி பிற பணிவார். 407
தென் இலங்கை இராவணன்
தன் சிரம் ஈரைந்தும் துணித்த
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும்
பெரும் பாதகம் தீர்த்த
பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து
போய்ப் பெரு மகிழ்ச்சி
துன்னி மனம் கரைந்து உருகத்
தொழுது எழுந்தார் சொல் அரசர். 408
தேவர் தொழும் தனி
முதலைத் திரு இராமேச்சுரத்து
மேவிய சங்கரனை எதிர்
நின்று விருப்புறு மொழியால்
பாவு திரு நேர் இசைகள்
முதலான தமிழ் பாடி
நாவரசர் திருத் தொண்டு நலம்
பெருகச் செய்து அமர்ந்தார். 409
அங்குறைந்து கண் நுதலார் அடி
சூடி அகன்று போய்ப்
பொங்கு தமிழ்த் திரு நாட்டுப்
புறம் பணை சூழ் நெல் வேலி
செங்கண் விடையார் மன்னும்
திருக் கானப் பேர் முதலாம்
எங்கும் நிகழ் தானங்கள்
எல்லாம் புக்கு இறைஞ்சுவார். 410
தொழுது பல வகையாலும் சொல்
தொடை வண் தமிழ் பாடி
வழுவில் திருப்பணி செய்து மனம்
கசிவு உற்று எப் பொழுதும்
ஒழுகிய கண் பொழி புனலும்
ஓவாது சிவன் தாள்கள்
தழுவிய சிந்தையில் உணர்வும்
தங்கிய நீர்மையில் சரித்தார். 411
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில்
எங்கும் சென்று இறைஞ்சிப்
பாம்பு அணிவார் தமைப் பணிவார்
பொன்னி நாடது அணைந்து
வாம் புனல் சூழ் வள நகர்கள்
பின்னும் போய் வணங்கியே
பூம் புகலூர் வந்து அடைந்தார்
பொய்ப் பாசம் போக்குவார். 412
பொய்கை சூழ் பூம் புகலூர்ப்
புனிதர் மலர்த் தாள் வணங்கி
நையும் மனப் பரிவினோடும்
நாள் தோறும் திரு முன்றில்
கை கலந்த திருத் தொண்டு
செய்து பெரும் காதல் உடன்
வைகு நாள் எண் இறந்த
வண் தமிழ் மாலைகள் மொழிவார். 413
நின்ற திருத் தாண்டகமும்
நீடு தனித் தாண்டகமும்
மன்று உறைவார் வாழ் பதிகள்
வழுத்து திருத் தாண்டகமும்
கொன்றை மலர்ச் சடையார் பால்
குறைந்த திரு நேர் இசையும்
துன்று தனி நேர் இசையும்
முதலான தொடுத்து அமைத்தார். 414
ஆருயிரின் திரு விருத்தம்
தச புராணத்து அடைவும்
பார் பரவும் பாவ
நாசப் பதிகம் பன்முறையும்
நேர் பட நின்று அறை
கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்
பேர் அருளின் கடல்
அளிக்கும் பெருமானைப் பாடினார். 415
அந் நிலைமையினில் ஆண்ட அரசு
பணி செய்ய அவர்
நல் நிலைமை காட்டுவார் நம்பர்
திரு மணி முன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த
இடம் தான் எங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து
இலங்க அருள் செய்தார். 416
செம்பொன்னும் நவமணியும் சேண்
விளங்க ஆங்கொவையும்
உம்பர் பிரான் திருமுன்றில் உருள்
பருக்கை உடன் ஒக்க
எம் பெருமான் வாகீசர்
உழ வாரத்தினில் ஏந்தி
வம்பலர் மென் பூங்கமல
வாவியினில் புக எறிந்தார். 417
புல்லோடும் கல்லோடும்
பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறு பாடு இலா
நிலைமை துணிந்து இருந்த
நல்லோர் முன் திருப் புகலூர்
நாயகனார் திரு அருளால்
வில்லோடு நுதல் மடவார்
விசும்பூடு வந்து இழிந்தார். 418
வானகம் மின்னுக் கொடிகள் வந்து
இழிந்தால் என வந்து
தான நிறை சுருதிகளில்
தகும் அலங்காரத் தன்மை
கான அமுதம் பரக்கும்
கனிவாயில் ஒளி பரப்பப்
பானல் நெடுங் கண்கள் வெளி
பரப்பி இசை பாடுவார். 419
கற்பகப் பூந்தளிர் அடி போம்
காமரு சாரிகை செய்ய
உற்பலம் மென் முகிழ் விரல்
வட்டு அணையோடும் கை பெயரப்
பொற்புறும் அக் கையின் வழிப்
பொரு கயல் கண் புடை பெயர
அற்புத பொன் கொடி
நுடங்கி ஆடுவபோல் ஆடுவார். 420
ஆடுவார் பாடுவார் அலர்
மாரி மேல் பொழிவார்
கூடுவார் போன்று அணைவார்
குழல் அவிழ இடை நுடங்க
ஓடுவார் மார வேளுடன்
மீள்வார் ஒளி பெருக
நீடுவார் துகில் அசைய
நிற்பாரும் ஆயினார். 421
இத் தன்மை அரம்பையர்கள்
எவ்விதமும் செயல் புரிய
அத்தனார் திருவடிக் கீழ் நினைவு
அகலா அன்பு உருகும்
மெய்த் தன்மை உணர்வு உடைய
விழுத் தவத்து மேலோர் தம்
சித்த நிலை திரியாது செய்
பணியின் தலை நின்றார். 422
இம் மாயப் பவத் தொடக்காம்
இருவினைகள் தமை நோக்கி
உம்மால் இங்கு என்ன குறை
உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன்
அலையேன் மின் நீர் என்று
பொய்ம் மாயப் பெருங் கடலுள்
எனும் திருத் தாண்டகம் புகன்றார். 423
மாதர் அவர் மருங்கு அணைய
வந்து எய்தி மதன வசக்
காதலர் புரிந்து ஒழுகும்
கை தவங்கள் செய்திடவும்
பேதம் இலா ஓர் உணர்வில்
பெரிய வரைப் பெயர்விக்க
யாதும் ஒரு செயல் இல்லாமையில்
இறைஞ்சி எதிர் அகன்றார். 424
இந் நிலைமை உலகு ஏழும்
எய்த அறிந்து இயல்பு ஏத்த
மன்னிய அன்பு உறு பத்தி
வடிவு ஆன வாகீசர்
மின் நிலவும் சடையார் தம் மெய்
அருள் தான் எய்த வரும்
அந்நிலைமை அணித்து ஆகச் சில
நாள் அங்கு அமர்ந்து இருந்தார். 425
மன்னிய அந்தக் கரணம்
மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரண் ஆன
தமியேனைப் புகலூரன்
என்னை இனிச் சேவடிக்கீழ்
இருத்திடும் என்று எழுகின்ற
முன் உணர்வின் முயற்சியினால்
திருவிருத்தம் பல மொழிந்தார். 426
மண் முதலாம் உலகு ஏத்த
மன்னு திருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன் அடிக்கே
போதுகின்றேன் எனப் புகன்று
நண்ணரிய சிவ ஆனந்த
ஞான வடிவே ஆகி
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட
அரசு அமர்ந்து இருந்தார். 427
வானவர்கள் மலர் மாரி மண்
நிறைய விண் உலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய
ஒலியும் விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின எல்லாம் உள்
நிறைந்த பெரு மகிழ்ச்சி
தான் நிறைந்த சித்திரையில்
சதயம் ஆம் திரு நாளில். 428
அடியன் ஏன் ஆதரவால்
ஆண்ட அரசின் சரிதப்
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன்
அப் பர முனிவன்
கடி மலர் மென் சேவடிகள் கை
தொழுது குலச் சிறையார்
முடிவில் புகழ்த் திருத் தொண்டின்
முயற்சியினை மொழிகின்றேன். 429
திருச்சிற்றம்பலம்