பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 14. சிவ தரிசனம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை

சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்

சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்

சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.  1 

 

 

வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்

நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது

போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை

ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.  2 

 

 

பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று

உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்

தரனாய்த் தனாதென வாறுஅறி வொண்ணா

அரனாய் உலகில் அருள்புரிந் தானே.  3 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

அகப்பேய்ச் சித்தர்
View Details
தடாதகைப் பிராட்டியாரின் பிறப்பு
View Details
செருத்துணை நாயனார்
View Details