பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 13. ஊழ்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியிலென்

மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்

வித்தக நந்தி விதிவழி யல்லது

தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.  1 

 

 

தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்

வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை

கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று

நான்முன்னம் செய்ததே நன்னில மானதே.  2 

 

 

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே

கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை

நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்

பேறிட்டுஎன் உள்ளம் பிரியகி லாவே.  3 

 

 

வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலென்

கான்நின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்

தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்

நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே.  4 

 

 

ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்

கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்

ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த

ஞானத்து உழவினை நான்உழு வேனே.  5 

 

 

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்

நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை

வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்

பாடது நந்தி பரிசறி வார்க்கே.  6 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கணம்புல்ல நாயனார்
View Details
வரகுண பாண்டியனின் பழியை ஒழித்தல்
View Details
ஸ்ரீ போடோ சித்தர் ஞானி
View Details