பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்

பற்றும் பரோபதி ஏழும் பகருரை

உற்றிடும் காரிய காரணத் தோடற

அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.  1 

 

 

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு

வேறாய் நனவு மிகுந்த கனாநனா

ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தாப்

பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.  2 

 

 

அகாரம் உயிரே உகாரம் பரமே

மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்

சிகாரம் சிவமே வகாரம் பரமே

யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.  3 

 

 

உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று

அயிர்ப்பறு காரணோ பாதி விதிரேகத்து

உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி

வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.  4 

 

 

காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு

காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்

காரிய காரணம் கற்பனை சொற்பதப்

பாரறும் பாழில் பராபரத் தானே.  5 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

உக்கிர பாண்டியனுக்கு வளையம்ரூபவ் வேல்ரூபவ் சண்டாயுதம் கொடுத்தல்
View Details
வட ஆலவாய் தோன்றல்
View Details
கண தங்கணான் சித்தர்
View Details