பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 05. அத்துவாக்கள்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி

மெய்த்தகு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி

ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று

வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே.  1 

 

 

நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து

ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்

கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று

தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.  2 

 

 

சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி

ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்

தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது

தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே.  3 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

மானக்கஞ்சாற நாயனார்
View Details
சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தர்
View Details
பட்டினத்தார்
View Details